search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"

    • மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸை சிபிஎம், காங்கிரஸ் எதிர்த்து நிற்கிறது
    • உத்தர பிரதேசத்தில் மீண்டும் தொகுதியை கைப்பற்ற விரும்பும் அகிலேஷ் யாதவ்

    ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 5-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பகேஷ்வர், உத்தர பிரதேசத்தில் உள்ள கோசி, கேரளாவில் உள்ள புதுபள்ளி, மேற்கு வங்காளத்தில் உள்ள துப்குரி, ஜார்க்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவில் உள்ள போக்சாநகர், தன்புர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.

    விரைவில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல், 2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு இது பரிசோதனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தன்புர், பகேஷ்வர், துப்கரி தொகுதிகள் பா.ஜனதா வசம் இருந்தவை. உத்தர பிரதேசம் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள தொகுதிகள் முறையே சமாஜ்வாடி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சாவிடம் இருந்தவை. திரிபுரா மாநில தொகுதி சிபிஎம் இடம் இருந்தவை. புதுப்பள்ளி காங்கிரசிடம் இருந்தவை.

    தாரா சிங் சவுகான் பா.ஜனதாவில் மீண்டும் இணைந்ததால் உ.பி. கோசி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்றி அகிலேஷ் யாதவ் கூட்டணி பலத்தை நிரூபிக்க விரும்பும். அதேவேளையில் கேரளாவில் உம்மன்சாண்டி மகன் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    திரிபுராவில் வாக்கு எண்ணிக்கையை புறக்கணிக்க இருப்பதாக சிபிஎம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு நடைபெற்ற போது முறைகேடு நடைபெற்றதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக சிபிஎம், காங்கிரஸ் இணைந்துள்ளன. மூன்று கட்சிகளும் இந்தியா கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
    • வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் கோசி, ஜார்க்கண்ட் மாநிலம் டும்ரி, மேற்கு வங்காளத்தில் தூப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஸ்வரர்,மற்றும் திரிபுராவில் தன்கர், போக்சநகர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன. கோசி மற்றும் தன்கர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததாலும் மற்ற 5 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்ததாலும் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை 7 மணிக்கு 7 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். பல வாக்குசாவடிகளில் ஓட்டுப்போடுவதற்காக காலை முதலே வாக்காளர்கள் காத்திருந்தனர். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.

    உத்தரபிரதேசம் கோசி தொகுதியில் ஆளும் பாரதியஜனதாவுக்கும், எதிர்கட்சிகள் புதிதாக உருவாக்கி இருக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாடி எம்.எல்.ஏ.வாக இருந்த தாராசிங் சவுதான் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வுக்கு எதிராக சமாஜ்வாடி கட்சி போட்டியிடுகிறது. இவருக்கு காங்கிரஸ்,கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி போட்டியிடவில்லை. இதே போல டும்ரி தொகுதியில் பாரதியஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் நேரடியாக மோதுகிறது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜனதா கூட்டணி வேட்பாளராக ஏ.ஐ.எம். ஐ.எம். கட்சியும் நேரடியாக களத்தை சந்தித்துள்ளது.

    திரிபுரா போக்சநகர் தொகுதியில் பாரதிய ஜனதாவுக்கும், மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மேற்குவங்காளம் தூப்குரி தொகுதியில் பா.ஜ.க. திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்டு கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணி உருவான பிறகு நடைபெறும் 6 மாநிலங்களில் நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பதால் தேர்தல் முடிவு பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
    • வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.

    கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி (இன்று) இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.

    இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.

    • தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது.
    • வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது

    புதுடெல்லி:

    கேரளாவில் உம்மன்சாண்டி மறைவால் காலியான புதுப்பள்ளி தொகுதி மற்றும் திரிபுராவில் 2 தொகுதி, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு தொகுதி என மொத்தம் 7 தொகுதிகளுக்கு செப்டம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்.

    அவற்றின் வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் 8-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ. தாராசிங், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்ததால் அந்த இடம் காலியானது. மற்ற தொகுதிகளின் உறுப்பினர்கள் மறைவால் அந்த இடங்கள் வெற்றிடமானது.

    இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதி நடைபெறுகிறது.

    • தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தனர்.
    • தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளன. சுமார் 60 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் பெருநகரம் என்ற அந்தஸ்தை சென்னை மாநகரம் பெற்றுள்ளது.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்பட்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த முதல் பெண் மேயராக ஆர்.பிரியா தேர்வு செய்யப்பட்டார்.

    மாநகராட்சி மன்றத்தில் தி.மு.க.வின் பலம் 153 உறுப்பினர்களை கொண்டு உள்ளது. அ.தி.மு.க. 15, காங்கிரஸ்-13, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் தலா 4 உறுப்பினர்கள் உள்ளனர்.

    ம.தி.மு.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்களும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ஜனதா, அ.ம.மு.க. தலா ஒரு உறுப்பினர்களை கொண்டு உள்ளது. சுயேட்சை உறுப்பினர்கள் 5 பேர் உள்ளனர்.

    இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரும், காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவரும் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தனர். இதனால் வார்டுகள் காலியாக உள்ளன.

    122-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஷிபா வாசு, 165-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணம் அடைந்தனர்.

    கடந்த 7-ந்தேதி கலைஞர் கருணாநிதி நினைவு பேரணியில் பங்கேற்ற தி.மு.க. கவுன்சிலர் ஆலப்பாக்கம் சண்முகம் மாரடைப்பால் உயிரிழந்தார். 3 கவுன்சிலர்கள் மறைந்ததையொட்டி அந்த இடங்கள் காலியாக உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளன. அதில் 122 மற்றும் 165 ஆகிய இரண்டு வார்டுகளுக்கு மட்டும் முதலில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. சமீபத்தில் இறந்த ஆலப்பாக்கம் சண்முகம் வார்டில் தற்போது நடைபெறவில்லை.

    சென்னை மாநகராட்சி மன்ற செயலாளர் 122, 165 ஆகிய வார்டுகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி விவரங்களை கொடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து அடுத்த மாதம் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    அதற்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் எங்கெங்கு காலி இடங்கள் உள்ளது என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ஒரே நாளில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து மாநகராட்சி கமிஷனரும் தேர்தல் அதிகாரியுமான ராதாகிருஷ்ணன் இந்த இரண்டு வார்டுகளுக்கும் முறையான தேர்தல் நடைமுறைகளை அறிவிப்பார்.

    சென்னையில் 3 வார்டுகள் காலியாக இருப்பதால் அந்த இடங்களில் போட்டியிட தி.மு.க., காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் இப்போதே களத்தில் இறங்கி விட்டனர். 

    • காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
    • செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி உடல்நலம் பாதித்து கடந்த ஜூலை மாதம் 18-ந்தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த புதுப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு செப்டம்பர் 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து காங்கிரஸ் கட்சி புதுப்பள்ளி வேட்பாளரை அறிவித்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் உடனடியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். மற்ற கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இடைத் தேர்தல் தேதியை மாற்றி அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. கோட்டயம், மணற்காடு தேவாலயங்களில் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை திருவிழா நடைபெறுவதால் 5-ந்தேதி தேர்தல் பணி பாதிக்கப்படலாம் என்பதால் இடைத்தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

    புதுப்பள்ளிக்கு விரைவாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு இடதுசாரி ஜனநாயக முன்னனி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓணம் பண்டிகை, அய்யன்காளி-ஸ்ரீநாாயணகுரு ஜெயந்தி, மணற்காடு பெருநாள் போன்ற கொண்டாட்டங்களை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக இடதுசாரி ஜனநாயக முன்னனியின் தொகுதி பொறுப்பாளரும், கேரள மந்திரியுமான வி.என். வாசவன் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் புதுப்பள்ளி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கேரள மாநிலத்தின் இரு பிரதான கட்சிகளும் புதுப்பள்ளி இடைத்தேர்தல் தேதியை மாற்றவேண்டும் என்று வலுயுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது.
    • நாளை மறுநாள் தொடங்கி 17ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

    புதுடெல்லி:

    ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணை நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. அன்றே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 17ம் தேதி வரை மனுக்களை தாக்கல் செய்யலாம். ஆகஸ்ட் 18ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. மனுக்களை திரும்ப பெற விரும்புவோர் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் திரும்ப பெறவேண்டும். செப்டம்பர் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. செப்டம்பர் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

    • அதிக முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து, சாதனை படைத்துள்ளேன்.
    • பத்மராஜன் இதுவரை 228 முறை தேர்தலில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெங்களூரு:

    கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடைபெறும். மனு தாக்கல் செய்பவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    மனுக்களை தாக்கல் செய்ய 20-ந்தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 23-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் 30-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட உள்ளனர். மனுதாக்கலின் முதல் நாளான நேற்று தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் 235-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    நாட்டின் எந்த மூலையில் தேர்தல் நடைபெற்றாலும், அங்கு சென்று மனு தாக்கல் செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். இதுகுறித்து பத்மராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 1988-ல் தொடங்கிய எனது தேர்தல் பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்கிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே. அப்துல்கலாம், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், பிரதமர் நரேந்திமோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், வாஜ்பாய் மட்டும் இன்றி முன்னாள் முதல்வர்கள் பலருக்கு எதிராக போட்டியிட்டுள்ளேன்.

    தேர்தலில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். பணம், செல்வாக்கு இருப்பவர் மட்டும் தேர்தலில் நிற்க முடியும் என்பது தவறானது. இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.

    அதிக முறை போட்டியிட்டு அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்து, சாதனை படைத்துள்ளேன். இதுவரை ரூ.1 கோடி வரை டெபாசிட் பணத்தை இழந்துள்ளேன். நான் கட்டிய பணம் ஒன்றிய அரசு கருவூலத்திற்கு சென்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பத்மராஜன் இதுவரை 228 முறை தேர்தலில் மனுதாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வார்டு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
    • நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து திருப்பூர் 22-வது வட்ட தி.மு.க. மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் வார்டு உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் ராஜ்குமார், முன்னாள் பகுதி செயலாளர் செல்வராஜ், மாநகர பொறுப்பாளர்கள் சரவணகுமார், திராவிட பாலு, பகுதி பொறுப்பாளர் குப்புசாமி, காங்கிரஸ் வார்டு தலைவர் நடராஜ், கொங்குநாடு தேசிய முற்போக்குகழகத்தின் பொறுப்பாளர்கள் மாடிகோவில் செல்வகுமார், சி.பி.ஐ.செயலாளர் சின்னச்சாமி, சி.பி.எம். பொறுப்பாளர் சுப்பிரமணி, ம.தி.மு.க. செயலாளர் ராஜமாணிக்கம், தொ.மு.ச. தங்கராஜ் உள்பட கூட்டணி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ேதால்வியை சந்திக்கும் என மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசினார்.
    • சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    விருதுநகர்

    சிவகாசி அம்மன்கோவில்பட்டி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருடன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கலந்துரையாடினார்.

    அப்போது மாணவ மாணவியர் தரையில் அமர வைக்கப்பட்டதை கண்ட மாணிக்கம் தாகூர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் அதற்கான காரணத்தை கேட்டபோது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கைகள் இல்லை என தெரிவித்ததை தொடர்ந்து தனது நிதியின் மூலம் மாணவர்களுக்கு இருக்கைகள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிவகாசி மாநகராட்சியை இணைக்க வேண்டும்.இதன் மூலம் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தப்படும்.

    ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோல்வி கண்ணிற்கு முன் நிற்பதால் அழ தொடங்கிவிட்டார். அ.தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்க உள்ளதை எடப்பாடி பழனிச்சாமி அறிந்து கொண்டுள்ளார் .

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் ஆதரவு மிக முக்கியமான ஆதரவாக காங்கிரஸ் பார்க்கிறது. காங்கிரஸ் கட்சி கமல்ஹாசனுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து அதன் பிரதிபலிப்பாக நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக சிவகாசியில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மாணிக்கம் தாகூர் எம்.பி. தொடங்கி வைத்தார்.

    • மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஈரோடு

    ஈரோடு மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 20 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள் ஆகியோர்களுக்கான பயிற்சி வகுப்பு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.

    தங்கள் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் பல்வேறு வழிகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் விரைந்து வாக்குச்சாவடிகளுக்குச் செல்லக்கூடிய வழிகளையும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குச்சாவடிக்குச் செல்லக்கூடிய வழியில் உள்ள சாலைகளின் ஆறு, வாய்க்கால் மற்றும் பாலங்கள் உள்ளதா? என்பது குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் தணிக்கை செய்து வாக்குச்சாவடி அமைந்துள்ள இடத்தின் நிலை, வாக்குச்சாவடிக்கட்டிடம், தளவாடங்கள், அடிப்படை வசதிகள் (குடிநீர் வசதி, சாய்வுதளவசதி, மின் வசதி, கழிப்பறை வசதி, தொலைபேசி வசதி) மற்றும் பாதுகா ப்பு தொடர்பான வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

    பிரச்சினைக்குரிய மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் எழக்கூடிய வாக்குச்சாவடிகள் இருப்பின் அது குறித்து ஆய்வு செய்து முந்தைய காலத்தில் ஏதாவது சம்பவங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும், ஜாதி, இன கலவரங்கள் நடந்துள்ளதா என்பது குறித்தும்,

    தொடர்ச்சியாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் நடைபெற்று ள்ளதா என்பது குறித்தும் விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    மண்டல அலுவலர் மற்றும் உதவி மண்டல அலுவலர் ஆகியோர் மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரத்தை எவ்வாறு இயக்குவது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வை

    தங்களது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் இது குறித்து விரிவான விளம்பரத்தை அந்தப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மூலம் ஏற்படுத்த வேண்டும். வாக்குச்சாவடிகளில் பணிபுரிகின்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கத்தக்க வகையில் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முழுமையாக விபரங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    வாக்குப்பதியும் நாளுக்கு முந்தைய நாளில் செய்ய வேண்டியவை தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் உரியஅனைத்து படிவங்கள், கவர்கள், இதரபொருட்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பச்சைநிற முத்திரைத் தாள்கள உலோக முத்திரை அழியாமைக்குப்பிகள் வாக்காளர் பட்டியல்கள், தேவையான அளவு உபரி படிவங்கள், கவர்கள், பொருட்கள் ஆகியவற்றை கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.

    அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் சென்று உரிய பொருட்களை கொடுத்த பின்னர் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் வருகை புரிந்து உள்ளார்களா என்பதை சரிபார்த்து கொள்ளவேண்டும்.

    அலுவலர்கள் பணிக்கு வராத நேர்வுகளில் மாற்று ஏற்பாடு உடனே செய்யப்பட வேண்டும். இதற்கு வசதியாக தேவை யான அளவு ரிசர்வ் வாக்குப்பதிவு அலுவலர்களை நீங்கள் கைவசம் வைத்திருப்பது அவசியம்.

    தாலூகா வட்டார தலைமையிடத்தில் இருந்து தொலைவில் உள்ள வாக்குச்சாவடிகள் அடங்கிய மண்டல அலுவலர்கள் கட்டாயம் ரிசர்வ் பணியாளர்களை தேவையான அளவு தங்களது வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும்.

    தங்கள் மண்டலத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி களுக்கும் 100 மீட்டர்சுற்று எல்லைக்குள் எவ்வித சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருக்கக்கூடாது என்பதும், வேட்பாளர்களின் தேர்தல் சாவடிகள் 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் அமைக்கப்பட வேண்டும்.

    மேலும் வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் சின்னங்கள், கட்சி தொடர்பான விளம்பரங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் காவல் துறையினருக்கு உடனே தகவல் தெரிவித்து மேற்படி இனங்களை உடனடியாக அகற்றுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் முழுமையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தினை இயக்குவதற்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் தெரிந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். எவ்வாறு இயக்குவதுஎன்பதை அவர்களை செய்து காட்டச் சொல்ல வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று செய்ய வேண்டியவை காலை 7 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி அதனை உடனே தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தொலைபேசி மூலமாக தெரிவிக்க வேண்டும்.

    மாதிரி வாக்குப்பதிவு தேர்தல் மின்னணுவாக்குப்பதிவு எந்திரத்தில் ஏஜெண்ட்டுகளுக்கு செய்து காட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஏதாவதொரு வாக்குச்சாவடியில் தாமதம் காணப்பட்டால் வாக்குச்சாவடி அலுவலருக்கு உரிய உதவிகள் செய்து, வாக்குப்பதிவினை தாமதம் இன்றி ஆரம்பித்து வைக்கஆவண செய்ய வேண்டும்.

    வாக்குச்சாவடிகளில் இருப்பதற்கு தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்க ப்பட்ட நபர்களை தவிரவேறு எவரும் வாக்குச்சாவடிகளில் இருப்பார்களே யானால் அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

    வாக்குப்பதிவு நாளன்று குறைந்தபட்சம் 3 தடவையாவது ஒவ்வொரு வாக்குச்சாவடியையும் பார்வையிட வேண்டும். 2 மணிக்கொரு ஒருமுறை பதிவான வாக்குகளின் சதவீதத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.

    வாக்குப்பதிவு முடியற்ற பின்பு பட்டியலில் கண்டமுறைப்படி தேர்தல் பொருட்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடமிருந்து பெற்று, அவருக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் நாட்குறிப்பு, வாக்குச்சீட்டுகணக்கு, பேப்பர்சீல் கணக்கு மற்றும் டிக்ளரேசன் ஆகியவற்றை தனியாகப் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்ட ல அலுவலர்களுக்கு மின்ன ணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளுவது தொ டர்பான செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துக்கிருஷ்ணன், ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி, மண்டல அலுவலர்கள் மற்றும் உதவி மண்டல அலுவலர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    அவிநாசி:

    கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டத்தை உள்ளடக்கி அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. 98 சதவீதம் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் திட்டத்தை வெள்ளோட்டம் பார்த்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது.இருப்பினும் வருகிற ஏப்ரல் மாதம் திட்டம் வெள்ளோட்டம் பார்க்கப்படும் என நீர்வளத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

    60 ஆண்டு கனவு திட்டமான அத்திக்கடவு- அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் அதுவும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போதுதான் நிதி ஒதுக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.எனவே, அக்கட்சியினருக்கு இத்திட்டம் தேர்தல் பிரசாரத்தின் போது துருப்புச் சீட்டாக இருக்கப்போகிறது.

    அ.தி.மு.க., ஆட்சியின் போது திட்டம் கொண்டு வரப்பட்டாலும் திட்டம் எவ்வித தொய்வுமின்றி நடந்து முடிய தி.மு.க., அரசு தான் காரணம் என தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர். பல்வேறு கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள விடுபட்ட குளம், குட்டைகளை இணைப்பது தொடர்பான வாக்குறுதி களையும் அவர்கள் அளிக்கக்கூடும்.

    அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர் கூறுகையில், ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை, ஈரோடு கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் பயன் குறைவு. மாறாக பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபி, பவானிசாகர் வட்டாரங்கள் தான் அதிகம் பயன் பெறும்.இருப்பினும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அத்திக்கடவு திட்டம் சார்ந்து அரசியல் கட்சியினர் பிரசாரம் செய்வர் என்பதால் திட்டத்தை விரைந்து முடிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றனர்.

    ×