search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடைத்தேர்தல்"

    • ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
    • இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ம் தேதி கடைசி நாள். வேட்புமனு பரிசீலனை 8ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பபெற கடைசி நாள் பிப். 10. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நடக்கும இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பீகார், உ.பி.,யில் தலா ஒரு தொகுதிகளை பா.ஜ.க வெற்றி பெற்றது.
    • ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி தலா ஒரு தொகுதியை தக்கவைத்தது.

    புதுடெல்லி:

    பீகார், உத்திர பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

    உ.பி.,யின் ராம்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா, சமாஜ்வாதி வேட்பாளர் ஆசிம் ராஜாவை 33,702 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். சமாஜ்வாதி கோட்டையாக திகழ்ந்த இந்த தொகுதியை பா.ஜ.க முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

    இதேபோல், உ.பி.,யின் கதவுலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய லோக்தள கட்சியின் மதன் பையா, பா.ஜ.க. வேட்பாளர் ராஜ்குமார் சைனியை 22,165 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

    பீகாரில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கேதார் பிரசாத் குப்தா, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் மனோஜ் சிங்கை 76,653 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

    ஒடிசாவின் பதம்பூர் தொகுதிக்கு போட்டியிட்ட ஆளும் பிஜூ ஜனதாதள கட்சியின் பர்சா சிங் பரிகா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை 38.252 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். ...

    சத்தீஸ்கரின் கன்கெர் மாவட்டத்தில் உள்ள பனுபிரதப்பூர் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மாண்டவி வெற்றி பெற்றார்.

    ராஜஸ்தானின் சர்தர்ஷகார் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் சர்மா 26,852 ஓட்டுகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அசோக்குமாரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

    • பீகார்,தெலுங்கானா இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி வெற்றி.
    • மகாராஷ்டிரா இடைத்தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர் வெற்றி பெற்றார்.

    மகாராஷ்டிரா, பீகார், அரியானா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7 தொகுதிகளுக்கு கடந்த 3-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மகாராஷ்டிராக மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி வேட்பாளர் ருதுஜா லத்கே வெற்றி பெற்றுள்ளார்.

    பீகார் மாநிலம் மோகாமா தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தள வேட்பாளர் நீலம் தேவி வெற்றி பெற்றுள்ளார். அந்த மாநிலத்தின் மற்றொரு தொகுதியான கோபால்கஞ்சில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் குசும்தேவி வெற்றி பெற்றுள்ளார். அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பாவ்யா பிஷ்னோய்யும், உத்தரபிரதேசத்தில் கோலாகோகர்நார் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன்கிரியும் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

    இதேபோல் தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் டிஆர்எஸ் கட்சி வேட்பாளர் குஷ்குந்த்லா பிரபாகர் ரெட்டி 12 சுற்றுகளின் முடிவில் 82,025 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார்.  ஒடிசா மாநிலம் தாம்நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக மீண்டும் பெற்றி பெற்றுள்ளது.

    • 4 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சூரஜ் 3261 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார்.
    • 18 சுற்றுகள் முடிவில் பாஜக அந்த தொகுதியில் 1,700 ஓட்டுகள் கூடுதல் பெற்று பின்னர் இழுபறி காணப்பட்டது.

    6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. பீகாரில் உள்ள கோபால் கஞ்ச், மொகாமா, மராட்டியத்தில் இருக்கும் அந்தேரி கிழக்கு, அரியானாவில் ஆதம்பூர், தெலுங்கானாவில் முனுகோடு, ஒடிசாவில் தாம்நகர், உத்தரபிரதேசத்தில் கோலா கோகர்நாத் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்தது.

    பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியளவில் எண்ணப்பட்டன. 7 தொகுதிகளில் பாஜக 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சந்திரசேகர் ராவின் டி.ஆர்.எஸ். ஆகியவை தலா 1 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    அரியானா மாநிலம் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்-மந்திரி பஜன் லாலின் மகனுமான குல்தீப் பிஷ்னோய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்ததால் அங்கு தேர்தல் நடந்தது.

    இங்கு பாஜக சார்பில் பாவ்யா பிஷ்னோய், காங்கிரஸ் சார்பில் ஜெய்பிரகாஷ் போட்டியிட்டனர். இதில் தொடக்கத்தில் இருந்தே பாவ்யா முன்னிலையில் இருந்தார். 13 சுற்றுகள் முடிவில் பாஜக 10,913 ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் இருந்தது. காங்கிரசிடம் இருந்து அந்த தொகுதியை பாஜக கைப்பற்றுகிறது.

    உத்தரபிரதேசம் மாநிலம் கோலா கோகர்நாகத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அமன் கிரி 28 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

    18 சுற்றுகள் முடிவில் கிரி 73,371 ஓட்டுகளும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் வினய் திவாரி 48,734 ஓட்டுகளும் பெற்று இருந்தார். இதன் மூலம் பாஜக அந்த தொகுதியை தக்க வைத்து கொள்கிறது.

    ஒடிசா மாநிலத்தில் பிஜி ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள தாம்நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தொகுதியில் தொடக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலையில் இருக்கிறது.

    4 சுற்றுகள் முடிவில் பாஜக வேட்பாளர் சூரஜ் 3261 ஓட்டுகள் முன்னிலையில் இருந்தார். அவர் 18,181 ஓட்டுகளும், பிஜூ ஜனதா தள வேட்பாளர் அபந்தி தாஸ் 14,920 ஓட்டுகளும் பெற்று இருந்தனர். இந்த தொகுதியை பாஜக தக்க வைத்துக் கொள்கிறது.

    பீகார் மாநில மொகாமா தொகுதி ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. அனந்த்சிங் ஆயுத தடை சட்டத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அந்த தொகுதியில் ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் ஆனந்த்சிங் மனைவி நீலம் தேவியும், பாஜக சார்பில் சோனா தேவியும் போட்டியிட்டனர்.

    இந்த தொகுதியில் நீலம் தேவி வெற்றி பெற்றார். இதன் மூலம் அந்த தொகுதியை ராஷ்டீரிய ஜனதா தளம் தக்க வைத்து கொண்டது. 20 சுற்றுகள் முடிவில் நீலம் தேவி 16 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று இருந்தார். அதன் பிறகு அவர் மேலும் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    பீகார் மாநிலத்தில் உள்ள மற்றொரு தொகுதியான கோபால் கஞ்சில் கடும் போட்டி நிலவுகிறது. தொடக்கத்தில் ராஷ்டீரிய ஜனதா தளம் வேட்பாளர் மோகன் குப்தா முன்னிலையில் இருந்தார்.

    பின்னர் பாஜக வேட்பாளர் சூசும் தேவி முன்னிலை பெற்றார். மாறி மாறி இழுபறி நிலை காணப்பட்டது. 18 சுற்றுகள் முடிவில் பாஜக அந்த தொகுதியில் 1,700 ஓட்டுகள் கூடுதல் பெற்று பின்னர் இழுபறி காணப்பட்டது.

    பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி நிதிஷ்குமார் மெகா கூட்டணியில் இணைந்த பிறகு சந்தித்த முதல் இடைத்தேர்தல் இதுவாகும்.

    மராட்டிய மாநிலம் அந்தோரி கிழக்கு தொகுதியில் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா கட்சி முன்னிலையில் உள்ளது. இங்கு பாஜக போட்டியிடவில்லை. சிவசேனா வேட்பாளரும், மறைந்த எம்.எல்.ஏ.வின் மனைவியுமான ருதுஜா 29 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்று முன்னிலையில் உள்ளார். இந்த தொகுதியை உத்தவ் தாக்கரே தக்க வைத்து கொள்கிறார்.

    தெலுங்கானா மாநிலம் முனுகோட் தொகுதியில் ஆளும் டி.ஆர்.எஸ். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கு இடையேவும் கடும் இழுபறி ஏற்பட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன. 5-வது சுற்று முடிவில் டி.ஆர்.எஸ். முன்னிலையில் உள்ளது.

    • 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • மின்னனு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    உத்தரபிரதேசத்தில் கோலாகோரக்பூர், மகாராஷ்டிரா அந்தேரி கிழக்கு, தெலுங்கானாவில் முனு கோடு, அரியானாவில் ஆதம்பூர், ஒடிசாவில் தாம்நகர் மற்றும் பீகாரில் மோகாமா, கோபால்கஞ்ச் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னனு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்தபடி இன்று நடைபெறுகிறது. அதன்படி, வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னனி நிலவரம் காலை 9 மணிக்கு மேல் வெளிவரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவு இன்று மாலைக்குள் அறிவிக்கப்படுகின்றன.

    • ஒடிசா உள்பட 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • 5 மாநில இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும்.

    புதுடெல்லி:

    ஐந்து மாநில இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தஉள்ளது.

    ஒடிசா, பீகார், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5-ம் தேதி நடைபெறும்.

    இந்த இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நவம்பர் 17-ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான இறுதி நாள் நவம்பர் 21-ம் தேதி என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை பாகிஸ்தான் எதிர்கொண்டுள்ளது.
    • இம்ரான்கான் கட்சியின் 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்த இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்ந்தது. இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவர் ஷபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

    பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிக அளவு பணவீக்கம், அன்னியச் செலாவணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கானின் கட்சியைச் சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தின் கீழ்சபையிலிருந்து ராஜினாமா செய்தனர்.அந்த இடங்களுக்கு ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார்.

    பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, இம்ரான்கான் கட்சியினர் மொத்தம் இடைத்தேர்தல் நடந்த எட்டு இடங்களில் 7-ல் போட்டியிட்டு 6 இடங்களில் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன்மூலம் பாகிஸ்தான் அரசியலில் இம்ரான்கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியிருப்பதைக் காட்டுகிறது. இதையடுத்து, பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

    • இதற்கான அறிவிக்கை வருகிற 7-ந்தேதி வெளியிடப்படுகிறது.
    • நவம்பர் 6-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி :

    பல்வேறு காரணங்களால் 6 மாநிலங்களுக்கு உட்பட்ட 7 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. அந்தவகையில் பீகாரின் மோகமா, கோபால்கஞ்ச், மராட்டியத்தின் அந்தேரி கிழக்கு, அரியானாவின் ஆதம்பூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன.

    இதைப்போல தெலுங்கானாவின் முனுகோடு, உத்தரபிரதேசத்தின் கோலா கோரக்நாத், ஒடிசாவின் தாம்நகர் ஆகிய தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் இல்லை.

    எனவே இந்த தொகுதிகளுக்கு தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்தது. அதன்படி, இந்த தொகுதிகளில் அடுத்த மாதம் (நவம்பர்) 3-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிக்கை வருகிற 7-ந்தேதி வெளியிடப்படுகிறது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. இதற்கான இறுதிநாள் வருகிற 14-ந்தேதி ஆகும்.

    15-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் 17-ந்தேதி ஆகும். இந்த இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 6-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ளது.

    • ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்காக இடைத்தேர்தல் நடைபெற்றது.

    இதில்விஜய் (வயது 34) என்பவர் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வடக்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக ஒரு மனதாக போட்டியின்றி விஜய் தேர்வானார்.

    • திமுக. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
    • ஈஸ்வரமகாலிங்கம் 191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20ல் துவங்கியது. இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி திமுக. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 9 ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.இதில் 4740 வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், உள்ளிட்ட அதிகாரிகள் வாக்கு எண்ணும் பணியை ஒருங்கிணைத்து நடத்தினர். பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. வெற்றி செல்வன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈஸ்வரமகாலிங்கம் 191 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம். ஈஸ்வரமகாலிங்கம் - 1605 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்கள் சதீஷ்குமார் - 1414 வாக்குகளும், ராஜ் - 743 வாக்குகளும், சின்னசாமி - 632 வாக்குகளும், ஜெயப்பிரகாஷ் - 193 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வேட்பாளர் குமரவேல் - 84 வாக்குகளும் பெற்றனர். 69 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது. 191 வாக்குகள் வித்தியாசத்தில் ஈஸ்வரமகாலிங்கம் வெற்றி பெற்றார்.

    • வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது.
    • பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    கோவை:

    கோவை கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்தில் நெ.10 முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர். குருநல்லிபாளையம் 4-வது வார்டு, சொக்கனூர் ஊராட்சி 1-வது வார்டு நல் லட்டிபாளையம் ஊராட்சி 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய இடங்கள் காலியானது.

    இதே போல பொள்ளாச்சி வடக்கு வடக்கிப்பாளையம் ஊராட்சி 2 வார்டு உறுப்பினர், தொண்டாமுத்தூர் பேரூர் செட்டிப்பாளையம் 1 -வது வார்டு உறுப்பினர் பதவிகள் காலியானது. காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் அறி விக்கப்பட்டது. ஏற்கனவே நல்லட்டிபாளையம், சொக்க னூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள வார்டு உறுப்பினருக் கான தேர்தலில் வார்டு உறுப்பினர்கள் 2 பேர் போட்டி யின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதனால் நெ.10 முத்தூர் ஊராட்சி தலைவர் மற்றும் குருநல்லிபாளையம், வடக்கிப்பாளையம், பேரூர் செட்டிப்பாளையம் வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக ளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. வாக்குப் பெட்டிகள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    பின்னர் நெ.10 முத்தூர், குருநெல்லிப்பாளையம் பதிவான வாக்கு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

    அங்கு போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டு உள்ளது. வடக்கிப்பாளையத்தில் பதிவான வாக்குகள் பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், பேரூர் ெசட்டிப்பாளையத்தில் பதிவான வாக்கு பெட்டிகள் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் வைக்கப்பட்டது.

    வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணுவதற்கு மேஜைகள் போடப்பட்டு உள்ளது. ஒரு மேஜைக்கு 3 பேர் என 2 மேஜைகளுக்கு 6 பேர் பணிபுரிவார்கள். ஊராட்சி தலைவர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணியில் வேட்பாளர் மற்றும் அவருடன் ஒரு நபர் என 2 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அதேபோல வார்டு உறுப்பினர் பதவிக்கு வாக்கு எண்ணும் பணிக்கு ஒருவர் மட்டுமே அனுமதி உள்ளது. வாக்கு எண்ணும் பணியை பார்வையிட வரும் போது, செல்போன், பேனா, நோட்டு கொண்டு வர அனுமதி இல்லை. 

    • இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர்.
    • மொத்தம் 7518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர்.

    பல்லடம் :

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் காலியாக உள்ள ஊரக,நகர,உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி பல்லடம் ஒன்றியத்தில் 1வது வார்டு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது.இதற்கான வேட்புமனு தாக்கல் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த ஜூன்.20-ந்தேதி துவங்கியது.

    இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல்படி தி.மு.க. கூட்டணி சார்பில் ஈஸ்வரமகாலிங்கம் (காங்கிரஸ்), குமாரவேல்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்), சுயேட்சை வேட்பாளர்களாக சதீஸ்குமார்( சாலை உருளை),சின்னசாமி( தண்ணீர் குழாய்),ராஜ்(மறை திருக்கி),,ஜெயபிரகாஷ்( தீப்பெட்டி) உள்ளிட்ட 6 பேர் இடைத்தேர்தலில் போட்டியிட்டனர். இதில் ஆண்கள் 3720,பெண்கள் 3796, இதர பிரிவினர் 2,ஆக மொத்தம் 7518 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இந்தநிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.தேவராயன்பாளையம்,அரசு துவக்கப்பள்ளி, கோம்பக்காட்டுபுதூர் ஆர்.சி. துவக்கப்பள்ளி, பெத்தாம்பூச்சிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி, இச்சிப்பட்டி அரசு துவக்கப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 11 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.தேர்தலில் 2425 ஆண் வாக்காளர்களும், 2316 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 4741 வாக்காளர்கள் வாக்களித்தனர்.

    இது 63.06 சதவீதம் ஆகும். இந்த தேர்தல் பணியில் வாக்குச்சாவடி மையத்தில் 48 ஊழியர்கள், மற்றும் 70க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். தேர்தல் பணியை தேர்தல் நடத்தும் அலுவலர் அகமது, உதவி அலுவலர் அய்யாசாமி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பார்வையிட்டனர்.

    ×