search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்காயம்"

    • மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் நீக்கியது.
    • குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.433 வரை அதிகரித்து இருந்தது.

    மும்பை:

    மத்திய அரசு கடந்த ஆண்டு பாசுமதி அரிசி, வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. டன் வெங்காயம் 550 அமெரிக்க டாலருக்கு குறைவாக (ரூ.46 ஆயிரம்) ஏற்றுமதி செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டு இருந்தது.

    வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு காரணமாக மகாராஷ்டிராவில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதன் தாக்கம் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது. வெங்காய உற்பத்தி அதிகம் உள்ள நாசிக் உள்ளிட்ட தொகுதிகளில் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் தோல்வியை சந்தித்தன. விரைவில் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தநிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளை நேற்று முன்தினம் நீக்கியது.

    இதன் எதிரொலியாக இந்தியாவின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக் லசல்காவ் சந்தையில் வெங்காய விலை உயர்ந்தது. குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.433 வரை அதிகரித்து இருந்தது. நேற்று லசல்காவ் சந்தைக்கு 425 வாகனங்களில் 5 ஆயிரத்து 182 குவிண்டால் வெங்காயம் வந்தது. குவிண்டால் வெங்காயத்தின் விலை ரூ.3 ஆயிரத்து 700 முதல் ரூ.4 ஆயிரத்து 951 வரை ஏலம்போனது. சராசரியாக ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 700 ஆக இருந்தது.

    நேற்று முன்தினம் வெங்காயத்தின் சராசரி விலை குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 267 ஆக இருந்தது.

    வெங்காய விலை உயர்வு குறித்து லசல்காவ் சந்தை தலைவர் பாலாசாகேப் ஷிர்சாகர் கூறுகையில், "வெங்காய ஏற்றுமதிக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த குறைந்தபட்ச விலை கட்டுப்பாட்டை நீக்கியது நல்ல முடிவு. தற்போது சந்தை நிலவரம் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் தற்போது விவசாயிகளிடம் வெங்காயம் இல்லை. இதேபோல ஏற்றுமதி கட்டணமும் 40 சதவீதத்தில் இருந்து 20 ஆக எப்போது குறையும் என்பதிலும் தெளிவான தகவல் இல்லை" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மனிதர்களின் குடலில் உணவு செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.
    • வெங்காயம் அல்லியம் வகையைச் சேர்ந்த பூண்டு தாவரம்.

    உரிக்க உரிக்க ஒன்றும் இல்லாதது போல காணப்பட்டாலும் வெங்காயத்தில் இருக்கும் அரிய மருத்துவ குணங்கள் வேறு எதிலும் இல்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வெங்காயம் அல்லியம் வகையைச் சேர்ந்த பூண்டு தாவரம் ஆகும். ஒரு கையளவு வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, சர்க்கரை, வைட்டமின்-சி, வைட்டமின்-பி 6, பொட்டாசியம், மாங்கனீசு, செம்பு உள்பட பல சத்துக்கள் உள்ளன.

    மனிதர்களின் குடலில் உணவு செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. சில காரணங்களால் குடலில் இந்த பாக்டீரியாக்கள் குறைந்து விடும்போது நீரிழிவு முதல் பெருங்குடல் புற்றுநோய் வரை பல நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வெங்காயத்தில் பிரக்டோலிகோ சாக்கரைடுகள் உள்ளன. அவை, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கான உணவளிக்கும் ப்ரீபயாடிக்குகளாக செயல்படுகிறது. இதன் மூலம் உண்ணும் உணவு முழுமையாக சீரணம் ஆகி, உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. நோய்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.

    பொதுவாகவே வயதானவர்களுக்கு எலும்பு பலவீனம் ஏற்படும். எலும்பு தேய்மானத்தை தடுப்பதில் வெங்காயத்துக்கு நிகர் எதுவும் இல்லை. வெங்காயத்தில் உள்ள கரிம சல்பர் கலவைகள் உடலில் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. நீரிழிவு நோய் வருவதை தடுக்க உதவுகிறது. எனவே வெங்காயத்தை உணவில் தவறாமல் சேர்ப்பது பல நன்மைகளை தரும்.

    • புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
    • நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.

    தேவையான பொருட்கள்:

    சின்ன வெங்காயம் – ½ கிலோ

    கடுகு – ஒரு டீஸ்பூன்

    கொத்தமல்லி விதை – ஒரு ஸ்பூன்

    வெந்தயம் – ½ ஸ்பூன்

    பெருங்காயத்தூள் – ½ டீஸ்பூன்

    புளி – ஒரு பெரிய நெல்லிக்கா அளவு

    நல்லெணெய் – மூன்று டேபிள் ஸ்பூன்

    கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்

    கருவேப்பிலை – இரண்டு கொத்து

    உப்பு – தேவையான அளவு

    மஞ்சள் தூள் – இரண்டு சிட்டிகை

    மிளகாய் தூள் – 1½ டேபிள்ஸ்பூன்

    பொடி செய்த வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை:

    • சின்ன வெங்காயத்தை நன்கு பொடிதாக நறுக்கி கொள்ளுங்கள்.

    • பிறகு ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ½ டீஸ்பூன் பெருங்காயம் ஆகியவற்றை வருது பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.


    • புளியை 20 நிமிடம் ஊறவைத்து கரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    • பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெ சேர்த்து சூடுபடுத்தவும்.

    • எண்ணெய் சூடானதும் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    • வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    • பிறகு 1½ டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

    • பின் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி நன்றாக கிளறிவிட்டு மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகவைக்கவும்.

    • தண்ணீர் அனைத்தும் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் பொழுது நாம் பொடி செய்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து இரண்டு நிமிடம் மீண்டும் வதக்கவும்.

    • இரண்டு நிமிடம் கழித்து ஓரு ஸ்பூன் இடித்த வெல்லத்தை சேர்த்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் வேகவைத்தால் சுவையான வெங்காயம் தொக்கு தயார்.

    குறிப்பு: இந்த வெங்காயம் தொக்கு செய்ய சின்ன வெங்காயம் தான் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பெரிய வெங்காயத்தையும் பயன்படுத்தலாம். மேலும் புளி ஊறவைக்கும் போது தண்ணீர் கொஞ்சமாக ஊற்றி ஊறவைக்கவும். நிறைய ஊற்றிவிட வேண்டாம்.

    • பருவமழை நன்றாக பெய்திருப்பது, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட குறுவை பயிர்கள் சாகுபடிக்கு ஊக்கம் அளித்துள்ளது.
    • உள்நாட்டு சந்தையில் வெங்காயம் தாராளமாக கிடைக்கிறது.

    புதுடெல்லி:

    மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    நடப்பாண்டில் உரிய நேரத்தில் பருவமழை நன்றாக பெய்திருப்பது, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட குறுவை பயிர்கள் சாகுபடிக்கு ஊக்கம் அளித்துள்ளது. சம்பா பருவத்தில் வெங்காய உற்பத்தி குறைவாக இருந்தபோதிலும், தற்போது உள்நாட்டு சந்தையில் வெங்காயம் தாராளமாக கிடைக்கிறது. அதன் சில்லரை விலை சீராக இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அங்கு நடைபெற்று வரும் வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருகிறது.

    வழக்கமாக தினசரி 45 லாரிகளில் விற்பனைக்கு குவிந்து வரும் வெங்காயம் கடந்த சில நாட்களாக 30 லாரிகளாக குறைந்து விட்டது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ.30-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்து கிலோ ரூ.42-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் சூப்பர் மார்க்கெட் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அங்கு நடைபெற்று வரும் வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளதால் வெங்காயம் விலை அதிகரித்து இருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அதேபோல் மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோ ரூ.46-க்கும் வெளிமார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.60 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது.

    • வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் மட்டுமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.
    • சின்ன வெங்காய விவசாயத்தில் நஷ்டமே ஏற்பட்டுள்ளது.

    பல்லடம்:

    சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்துள்ள 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காய விலை கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன் பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சின்ன வெங்காயம் தமிழ்நாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மட்டுமே விளைவிக்க கூடியது. தமிழர்கள் வாழ்ந்து வரும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மட்டுமே சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் மட்டுமே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் அதிக அளவில் பொதுமக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்திற்கான ஏற்றுமதிக்கான தடையை அறிவித்தது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையான சரிவை சந்தித்தது. இந்த நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது. ஆனால் ஏற்றுமதிக்கு பெரிய வெங்காயத்திற்கு மட்டும் வரி விதிக்காமல் சின்ன வெங்காயத்திற்கும் சேர்த்து 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் சின்ன வெங்காய விலையும் கடுமையாக சரிவை சந்தித்துள்ளது.

    தற்போது பெரும்பாலும் விற்பனைக்கு வரக்கூடிய சின்ன வெங்காயம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளால் இருப்பு வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் நேரடியாக இருப்பு வைத்து விலை ஏறுகிற போது விற்பனை செய்கிற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்த மாதத்தில் விலை ஏற்றம் இருக்கும் என பலரும் ஆயிரக்கணக்கான டன் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்திருந்தனர்.

    ஆனால் அரசின் அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் தாங்கள் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தை விற்பனை செய்ய தொடங்கியுள்ளனர். தற்போது ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.50 முதல் ரூ.55 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதுவே 40 சதவீதம் வரி விதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சுமார் 20 ரூபாய் விலை ஏற்றம் இருந்திருக்கும். வரி விதிப்பால் அந்த விலையேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.மேலும் வெங்காயத்தை இருப்பு வைத்து விற்பனை செய்கிறபோது, அதில் 30 சதவீதம் கழிவுகள் ஏற்படும். மீதமுள்ள 70 சதவீதம் வெங்காயம் மட்டுமே விலைக்கு விற்க முடியும்.

    ஆனால் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் அளவிற்கு கழிவுகள் ஏற்படும். மீதமுள்ள 50 சதவீதத்தில் மட்டுமே சாகுபடி செலவு மற்றும் இவ்வளவு நாள் இருப்பு வைத்ததற்கான பலனை காண முடியும். ஆனால் அது போன்ற ஒரு நிலை தற்போது இல்லை. 40 சதவீதம் வரியால் சின்ன வெங்காய விவசாயத்தில் நஷ்டமே ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து சின்ன வெங்காயத்திற்கான வரி விதிப்பை நீக்க வேண்டும். மேலும் சின்ன வெங்காயத்திற்கும், பல்லாரி வெங்காயத்திற்கும், விலை முதல் விளைச்சல் வரை பல வேறுபாடுகள் உள்ளன. ஆனால் மத்திய அரசு இரண்டையும் ஒரே நிலைப்பாட்டில் வைத்து வெங்காய ஏற்றுமதிக்கு ஒரே எண் வழங்கி உள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.
    • 2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மிகப்பெரிய காய்கறி சந்தையாக விளங்கி வரும் பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    அண்டை மாநிலமான கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி ரூ.35 முதல் 40 வரை ஒரு கிலோ பல்லாரி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த வாரம் ரூ.25, ரூ.20 என படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பாவூர்சத்திரம் மார்க்கெட்டுக்கு மராட்டிய மாநிலத்தில் இருந்து அதிகளவில் பல்லாரி கொள்முதல் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது மராட்டிய மாநிலத்தில் பல்லாரி விளைச்சல் அதிகரிப்பால் அதிகளவில் லாரிகள் மூலம் தென் மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

    இதனால் பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் பல்லாரி விலை ரூ.10 முதல் ரூ.15 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் போதிய விற்பனை நடை பெறாததாலும் பாவூர்சத்திரம் மார்க்கெட் பகுதி மற்றும் நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை ஓரங்களில் 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் லோடுகள் இறக்காமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    2 நாட்களை கடந்தும் லாரிகளில் இருந்து பல்லாரி இறக்கப்படாமல் இருப்பதால் அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    • தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது பெரிய வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெங்காய விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

    வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

    பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது.

    போரூர்:

    சின்னவெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது. பின்னர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து அதன் விலை ரூ.100-க்கு கீழ் குறைந்தது. கிலோ ரூ.80 வரை விற்பனை ஆனது.

    இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வரத்து மீண்டும் குறைந்து உள்ளது. இதனால் அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனை கடைகளில் இன்று ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.90-க்கு விற்கப்படுகிறது.வெளி மார்க்கெட்டில் உள்ள கடைகளில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சின்னவெங்காயத்தின் விலை மீண்டும் கிலோ ரூ.100-யை கடந்து உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சமையலில் சின்ன வெங்காயத்தின் பயன்பாட்டை குறைத்து உள்ளனர். பெரிய வெங்காயத்திற்கு மாறி உள்ளனர்.

    எனினும் பெரிய வெங்காயத்தின் விலையும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இன்று மொத்த விற்பனை கடைகளில் முதல் ரக பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ. 50 ஆக உள்ளது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் தக்காளி உற்பத்தி நடந்து வரும் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து உள்ளது. தினசரி 55 லாரிகள் வரை விற்பனைக்கு குவிந்து வந்த தக்காளி இன்று 40 லாரிகளாக குறைந்தது. இதனால் தக்காளி விலையும் அதிகரித்து உள்ளது.

    மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50 வரையிலும் விற்பனை ஆனது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் விலை குறைந்து ரூ.50-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை (கிலோவில்) வருமாறு:-

    ஊட்டி கேரட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, பீட்ரூட்-ரூ.25, அவரைக்காய் ரூ.65, ஊட்டி சவ்சவ்-ரூ.20, முருங்கைக்காய்- ரூ.90, முட்டை கோஸ்-ரூ.8, உஜாலா கத்தரிக்காய்- ரூ.30, குடை மிளகாய் ரூ.20, வெண்டைக்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.35, பன்னீர் பாகற்காய்-ரூ.45, பீர்க்கங்காய்-ரூ.30.

    • கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு, காய்கறி மார்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயத்தின் அறுவடை தாமதமானதால் அங்கிருந்து வரும் வெங்காயத்தின் வரத்து கடந்த மாத இறுதியில் திடீரென பாதியாக குறைந்தது.

    இதனால் வெங்காயத்தின் விலை அதிகரிக்க தொடங்கியது. இதனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததால் அதன் விலை சரிந்து இந்த மாத தொடக்கத்தில் கிலோ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்து.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் பெரிய வெங்காயம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெளிமார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.75 வரை வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.

    வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர். வீடுகள் மற்றும் ஓட்டல்களில் சமையலுக்கு பெரிய வெங்காயத்தை பயன்படுத்துவரை குறைத்து உள்ளனர். இதேபோல் வரத்து குறைவால் சின்ன வெங்காயம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இன்று மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.90-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ ரூ.110 வரையிலும் விற்கப்படுகிறது.

    மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் மொத்த விற்பனை விலை(கிலோவில்) வருமாறு :- தக்காளி-ரூ.22, பீன்ஸ் - ரூ.70, அவரைக்காய்- ரூ.40, உஜாலா கத்தரிக்காய்-ரூ.17, வெண்டைக்காய்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.30, ஊட்டி பீட்ரூட்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, முருங்கைக்காய்-ரூ.70, பன்னீர் பாகற்காய்- ரூ25, புடலங்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.50, முட்டை கோஸ்-ரூ.6 பச்சை மிளகாய்- ரூ30 இஞ்சி- ரூ.100.

    • மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.
    • 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் ரபி குறுவை கால தோட்டப்பயிரான மரவள்ளி, வெங்காயம், கத்திரி ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்யலாம். இதற்காக அறிவிக்கை செய்யப்பட்ட சின்னசேலம், நயினார்பாளையம், இந்திலி, வடக்கநந்தல், ஆலத்தூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், நாகலூர், அரியலூர், ரிஷிவந்தியம், வடபொன்பரப்பி, சங்கரா புரம், சேராப்பட்டு, திருக்கோவிலூர், திருப்பா லப்பந்தல், ஆவிகொளப் பாக்கம், எறையூர், உளுந்தூர் பேட்டை, செங்குறிச்சி, திரு நாவலூர், எலவனாசூர் கோட்டை, வெள்ளிமலை, களமருதூர், மனலூர் பேட்டை ஆகிய குறு வட்டங்களில் விவசாயிகள் பதிவு செய்யலாம்.

    மேலும், தலா ஒரு ஏக்கருக்கு வெங்காயம் ரூ.909.17 மற்றும் கத்திரி ரூ.817.51 தொகையை வரும் ஜனவரி மாதம் 31- ந் தேதிக்குள்ளும், மரவள்ளி ரூ.1,517.51 தொகையை வரும் பிப்ரவரி மாதம் 29- ந் தேதிக்குள்ளும் செலுத்தி விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். எதிர்பா ராத திடீர் வெள்ளம் மற்றும் வறட்சி ஏற்படும் போது வழக்கத்தை விட 50 சதவீதம் பயிரின் மகசூல் குறைந்தி ருந்தால் காப்பீடு தொகை வழங்கப்படும். அறுவடை முடிந்த பின் 2 வாரங்க ளுக்குள் ஏற்படும் இழப்பு களுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

    எனவே கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அடங்கல், இ-அடங்கல் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பொது சேவை மையங்கள் மற்றும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது.
    • பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    போரூர்:

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தொடர்ந்து சின்னவெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது. இதனால் அதன் விலை உச்சம் அடைந்து உள்ளது.

    இன்று மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100-க்கும் வெளி மார்கெட்டில் உள்ள காய்கறி கடைகளில் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சில்லரை விற்பனை கடைகளில் கிலோ ரூ.80வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்து ரூ.65-க்கு விற்பனை ஆனது.

    ×