என் மலர்
நீங்கள் தேடியது "திறப்பு"
- 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது.
- இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே பொன்மனை பரவூர் பகுதியில் தனியார் மதுபான பாருக்கான கட்டுமான பணி நடைபெற்று வந்தது.
இதையடுத்து பொன் மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் பொன்மனை சந்திப்பில் நேற்று மாலை நடைபெற்றது. போராட்டத்தில் உறுப்பினர் ஜாஸ்மினி, பெண்கள், குழந்தைகள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் ஜான் போஸ்கோ, அ.தி.மு.க. மோகன்குமார், கம்யூனிஸ்டு பிரசாத், தி.மு.க. சேம் பெனட் சதீஷ், நாம் தமிழர் கட்சி சீலன், சமூக ஆர்வலர் சர்வேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரதிநிதிகள் தனியார் மதுபான பார் திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் பேசினார்கள். இந்த போராட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வர்கள் கலந்து கொள்ள வில்லை.
இது குறித்து பொன்மனை பேரூராட்சி தலைவர் அகஸ்டின் கூறுகையில், பொன்மனை பேரூராட் சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி தனியார் மதுபான பார் திறக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் ஆகியோருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.
இதனால் பொதுமக்களுடன் அனைத்து கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உடனே தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் தொடர்ந்து அப்பகுதியில் மதுபான கடை திறக்க முயற்சி செய்தால் பொது மக்களுடன் சேர்ந்து மிக பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என கூறினார்.
போராட்டத்தின் முடிவில் வார்டு உறுப்பினர் சாந்தி நன்றியுரை கூறினார்.
- பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது.
- மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருந்தனர்.
தென்காசி:
பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த மாடுகள் வளர்ப்போர் மாடுகளை வாங்குவதற்கோ அல்லது விற்பனை செய்வதற்கோ கடையம் மாட்டுச்சந்தை மற்றும் பிற மாட்டுச்சந்தையையே பயன்படுத்தும் சூழ்நிலையில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் பாவூர்சத்திரத்தில் ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெற்று வந்தது. தற்போது ஆட்டுச் சந்தை நடைபெறும் பகுதியின் அருகே இன்று முதல் புதிதாக மாட்டுச்சந்தை பாவூர்சத்திரம் பகுதி வியாபாரிகள் தொடங்கி உள்ளனர்.
இன்று முதல் நாள் மாட்டுச்சந்தை என்பதால் மாடுகளின் வரத்து மிகவும் குறைந்த அளவே இருந்தது. இருப்பினும் மாடுகளை வாங்குவதற்கு வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
பாவூர்சத்திரம் மாட்டுச்சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் வாரத்தில் புதன் கிழமை தோறும் மாட்டுச்சந்தையானது தொடர்ந்து நடைபெறும் என கூறினர். இதனை பயன்படுத்தி மாடுகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் பயனடை யுமாறு கேட்டுக் கொண்டனர்.
- புதிய நியாய விலைக் கடை திறக்கப்பட்டது
- எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவடடம், தா.பழூர் கிராமத்தில் பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. ெஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். பின்னர் அவர் குடும்ப அட்டைதாருக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இந் நிகழ்ச்சியில் கூட்டுறவு துணைப் பதிவாளர் அறபளி, மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சார் பதிவாளர் சசிகுமார், வட்ட வழங்கல் அலுவலர் ஜானகிராமன், ஊராட்சித் தலைவர் கதிர்வேல், கூட்டுறவு சங்கத் தலைவர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மேலூர் அருகே ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
- இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலூர்
மேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டாம்பட்டி யூனியன் கேசம்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூட கட்டிடத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் தலைவர் வளர்மதி குணசேகரன், முன்னாள் யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணை தலைவர் குலோத்துங்கன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் ராஜேந்திரன், கேசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி ராஜா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கிடாரிப்பட்டி சுரேஷ், கொட்டாம்பட்டி யூனியன் என்ஜினீயர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
பவானிசாகர் அணை யின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் 105 அடியை நெருங்கி வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.08 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 48 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணையில் இருந்து பவானி ஆற்றின் வழியாக உபரிநீராக 5, 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இதனால் பவானி ஆற்றில் இரு கரையோரம் தண்ணீர் தொட்டபடி செல்கிறது. இதனால் பவானி ஆற்றில் பொது மக்கள் துணி துவைக்குவோ குளிக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், கால்நடைகளை நீர் நிலைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்தம் 5600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வரு கிறது.
- கீழக்கரை வடக்கு தெருவில் மஸ்ஜித் கருணை பள்ளி திறக்கப்பட்டது..
- சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றினார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு மணல்மேட்டில் அமைந்துள்ள வடக்குத்தெரு ஜமாஅத் நிர்வாக சபைக்கு பாத்தியப்பட்ட மஸ்ஜித் கருணை பள்ளி கட்டிடத்தை வடக்குத்தெரு ஜமாத்தை சேர்ந்த தொழிலதிபர் அபூபக்கர் சித்தீக் தாயார் ஜைய்னுல் அரபு நினைவாக மறு சீரமைப்பு செய்யப்பட்டு புது பொலிவுடன் கட்டப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா வடக்கு தெரு ஜமாஅத் தலைவர் ரெத்தின முகம்மது தலைமையில், வடக்குத்தெரு ஜமாத் துணைத் தலைவரும் ராமநாதபுரம் மெர்லின் சீட் கவர் உரிமையாளருமான செல்ல வாப்பா (எ)அப்துல் ஹமீது, துணை செயலாளர் கவிஞர் அப்துல் ரசாக் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
கீழக்கரை டவுன் காஜி காதர் பாக்ஸ் ஹுசைன் சித்தீகி தொழுகை நடத்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார். சாகுல் ஹமீது ஆலிம் சிறப்புரையாற்றி னார். வடக்குத்தெரு ஜமாஅத் மஸ்ஜித் மன்பஈ பள்ளி தலைமை இமாம் கலீல் ரஹ்மான் ஆலிம், ஜமால் ஆலிம், ஜகுபர் சாதிக், மஸ்ஜித் கருணை பள்ளி இமாம் புர்கான் ஆலிம், தெற்குத்தெரு ஜமாத் செயலாளர் சயீது இபுராஹிம், கீழக்கரை நகராட்சி துணைத் தலைவர் வக்கீல் ஹமீது சுல்தான், நகராட்சி முன்னாள் சேர்மன் பஷீர் அகமது, கீழக்கரை ரோட்டரி சங்கத் தலைவர் சுல்த்தான் சம்சூல் கபீர், மக்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், கீழக்கரை நகர் மன்ற உறுப் பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்தார்.
- நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் கூட்டம் நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தை மாநில ஒருங்கி ணைப்பாளர் ஹீமாயுன் கபீர் திறந்து வைத்து பேசினார்.
இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் முகமது சர்வத்கான், கிருஷ்ணகுமார், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி, மாநில ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர் அரவி ந்தன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச்செயலாளர் உமர் முகமத், நாகை பாராளுமன்ற பொறுப்பாளர் அப்பு அகஸ்டீன் அற்புதராஜ், மாவட்ட தலைவர் செல்வம், மாவட்ட பொருளாளர் அலாவூதீன், தொகுதி தலைவர் பிஸ்மி கார்த்திக், செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர்கள் சுந்தர், கமலகண்ணன், ஒன்றிய தலைவர்கள் சந்திரமோகன், மதன் குமார், பொருளாளர் ராஜா, நகர தலைவர் மகேஷ்குமார், நகர செயலாளர் ஹாஜா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
- இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
- வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர், ஏற்காடு, கெங்கவல்லி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நீர் ஆதாரமாக உள்ளது வசிஷ்ட நதி. இந்த நதிக்கு கருமந்துறை கல்வராயன் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்த நீர் வசிஷ்ட நதி வழியாக கடலூர் மாவட்டத்தை சென்றடைகிறது. இதனால் வழியெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில காலமாக மழை இல்லாததால் வசிஷ்ட நதி வறண்டு காணப்பட்டது.
கைக்கான் வளவு திட்டம்
கடந்த அ.தி.மு.க. ஆட்சி யில் எடப்பாடி பழனிச்சாமி முதல்-அமைச்சராக இருந்தபோது கருமத்துறை கைக்கான் வளவு பகுதியில் இருந்து நீரை வாய்க்கால் மூலமாக கரிய கோயில் நீர் தேக்கத்திற்கு கொண்டு வந்து, அதன் பிறகு அந்த நீரை வசிஷ்ட நதியில் கொண்டு செல்ல புதிய திட்டம் தீட்டப்பட்டது. இதற்கு ரூ.7 1/2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது இத்திட்டம் விவசாயிகளின் பெரும் எதிர்பார்ப்போடும், ஒத்துழைப்போடும் செயல்ப டுத்தப்பட்டு உள்ளது.
பொங்கலிட்டு வழிபாடு
இதையடுத்து, இன்று விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் ஏராள மானோர் கலந்து கொண்டு அந்த நீரோடை வாய்க்காலுக்கு மலர் தூவி பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அகில பாரதிய சந்த் சமிதி மாநில தலைவர் யுக தர்ம குரு கருடானந்த மகராஜ் சுவாமிகள் கற்பூர தீபத்தை உள்ளே இறங்கி வழிபாடு நடத்தினார்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் நலன் கருதி, இந்த திட்டத்தை அறிவித்து அதனை முழுமையாக செயல்படுத்தி உள்ளார் என்றார்.
விவசாயிகள் நன்றி
இந்த நிகழ்ச்சிக்கு ஆத்தூர் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ, ஏற்காடு சித்ரா எம்.எல்.ஏ, கெங்கவல்லி நல்லதம்பி எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜன், நரசிங்கபுரம் நகர மன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர் வெங்கடாஜலம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சின்னத்தம்பி, பெத்தநா யக்கன்பாளையம் ஒன்றிய குழு துணை தலைவர் முருகேசன், பெத்தநாயக்கன்பாளையம் அ.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், தகவல் பிரிவு மாவட்டச் செயலா ளர் ஜெயகாந்தன் மற்றும் இந்த தண்ணீரை பயன்படுத்தும் ஆயக்கட்டு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் மலர் தூவி வரவேற்ற விவசாயிகள், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக வரவேற்பும் நன்றியும் தெரிவித்தனர்.
- காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
- ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் ரேசன் கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர்.
சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் ஆகியோரின் முயற்சியால் பொன்நகரில் பகுதிநேர ரேசன் கடை திறக்கப்பட்டது. காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் முன்னிலை வகித்தனர்.
சாக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம், சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பரசன், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயநிர்மலா, பொன்.துரைசிங்கம், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
- புதிய துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது
- மருதங்கோண் விடுதியில் கட்டி முடிக்கப்பட்ட
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார். அந்த வகையில் மறமடக்கியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் துணை சுகாதார நிலையங்களை திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருதங்கோண்விடுதயில் கட்டி முடிக்கப்பட்டு இருந்த துணை சுகாதார நிலையத்தை அங்கிருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்து சுகாதார நிலையத்தின் சாவினை மருத்துவரிடம் வழங்கினார்.
மருதங்கோண் விடுதியில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மாலாராஜேந்திரதுரை கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் பாப்பாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் கார்த்திகா, ஹெல்த் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிங்காரவேலு, ஊராட்சி மன்ற தலைவர் நிலோபர் நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் விஜயா பூபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, ரஞ்சனி , அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சாகுல் ஹமீது, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் அரங்கதங்கமணி நன்றி கூறினார்.
- கொரடாச்சேரி ஒன்றியத்தில் பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரடாச்சேரி ஒன்றியம், இலையூர் ஊராட்சி, அடவங்குடியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம், கொரடாச்சேரி ஒன்றியம், கரையாபாலையூர் ஊராட்சி, கட்டளையில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது விநியோக திட்ட கட்டிடம் ஆகியவைகளை பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
விழாவில் கூட்டுறவு இணைப்பதிவாளர் சித்ரா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர்சேகர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றி யக்குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன், ஒன்றிய பொறியாளர் ரவீந்திரன், கொரடாச்சேரி பேரூர் தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவேந்தன், ஊராட்சி தலைவர்கள் இலையூர் காமராஜ், கரையாபாலையூர் மீனா கல்யாணசுந்தரம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து பூண்டி கே.கலைவாணன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கொரடாச்சேரி ஒன்றியத்தில் பெருந்தரக்குடி ஊராட்சியில் ரூ.14.65 லட்சம் மதிப்பில் பொது விநியோக திட்ட கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் மதிப்பில் அபிவிர்தீஸ்வரம் மையத்தான் கொல்லையில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
ரூ.60 ஆயிரம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் பழுது நீக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.
கொரடாச்சேரி ஒன்றியத்தில் மட்டும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.75.45 லட்சம் மதிப்பில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்டது
- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்
திருச்சி
திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலகம் மற்றும் இ-சேவை மையத்தை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்துவைத்தார். திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி 3-வது மண்டலக்குழுத்தலைவரும், 16-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான மதிவாணன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமது, துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாவட்ட துணை செயலாளர் அ.த.த.செங்குட்டுவன், உதவி ஆணையர் தயாநிதி, வன்னை அரங்கநாதன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர், கவுன்சிலர் கோவிந்தராஜன், மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அமைச்சரிடம் மனு அளித்தனர்.