search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட்"

    • சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது.
    • வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றம்.

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு அறிவித்துள்ள 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழகத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பெயரளவில் கூட தமிழ்நாடு என்ற ஒரு சொல் கூட பட்ஜெட் வாசிப்பில் இல்லை.

    பீகாருக்கும், ஆந்திர பிரதேசத்திற்கு தரும் முக்கியத்துவம் எந்த ஒரு வகையிலும் ஒரு சதவீதம் கூட தமிழகத்திற்கு தரவில்லை என்பது கண்டனத்திற்குறியது.

    அதுமட்டுமில்லாமல் ஏற்கனவே ஜிஎஸ்டி (GST) மற்றும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பல்வேறு விதமான துன்பங்களை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஜிஎஸ்டி வரியை ஓரளவு குறைந்தாலும், விசைத்தறிகள், சிறு, குறு வியாபாரம் மற்றும் பல்வேறு விதமான தொழிற்சாலைகளை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும்.

    மேலும் சிறு கடைகள், வியாபாரம், சிறு தொழில்கள் போன்றவைகளுக்கு ஜிஎஸ்டி என்பது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் நிலையுள்ளது. எனவே ஜிஎஸ்டியை திரும்பப் பெறுவது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டிக்கு மத்திய பட்ஜெட்டில் புதிதாக விவசாயத்திற்கோ, ரெயில்வே துறையிலையோ, சாலைகளுக்கோ என எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

    வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய அளவு எந்த ஒரு மிகப்பெரிய தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் தமிழகத்திற்கு வராததும் பெரும் ஏமாற்றத்தை தந்திருக்கிறது.

    எனவே "ஒரு கண்ணில் வெண்ணையும்", "ஒரு கண்ணில் சுண்ணாம்பும்" வைத்து தமிழகத்தை மட்டும் வஞ்சிக்கக்கூடிய பட்ஜெட்டாக தமிழக மக்களாகிய நாங்கள் பார்க்கிறோம். இது பெரும் கண்டனத்துக்குரிய மத்திய பட்ஜெட் ஆகும்.

    இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

    • ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது.
    • தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது.

    அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது அம்சங்களை இலக்காக நிர்ணயித்திருப்பதோடு, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்புக்குரியது.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தும் திட்டம், விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கான கட்டமைப்புகள், தோட்டக்கலைகளில் 109 வகையிலான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம், தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு முக்கியத்துவம் என வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் புதிய முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும், வருமானத்தையும் உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

    உள்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்து லட்சம் வரை கல்விக்கடன், நாடு முழுவதும் நான்கு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி, அடுத்த ஐந்தாண்டுகளில் ஆயிரம் ஐடிஐகள் (ITI), உற்பத்தி துறையில் முதன்முறை பணியில் சேருவோருக்கு சிறப்பு நிதி, வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

    நியாய விலைக்கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PM-GKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் (PMAY) கீழ் நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள், வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளித் தகடுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது.

    ரூ.3 லட்சம் கோடியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள், பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் என பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, புதிய தொழில் பூங்காங்கள் போன்ற புதிய அறிவிப்புகள் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது.

    அதே நேரத்தில் தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    • 2014-ம் ஆண்டு வாக்கில் ரெயில்வே பயன்பாட்டிற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
    • 2014-க்கு முன் 60 ஆண்டுகளில் 20 ஆயிரம் கி.மீட்டர் ரெயில்வே தடம்தான் மின்சாரம் வழித்தடமாக இருந்தது.

    மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறை பற்றி குறிப்பிடவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில் ரெயில்வே துறைக்கு 2,62,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்பு தொடர்பான பணியில் மிகப்பெரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

    1,08,795 கோடி ரூபாய் பாதுகாப்பு தொடர்பான செயல்பட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய தண்டவாளங்கள் அப்புறப்படுத்தப்பட்டு புதிய தண்டவாளங்கள் அமைக்கப்படுவது, சிக்னல் சிஸ்டம் மேம்படுத்துதல் மேம்பாலங்கள் கட்டுவது, தண்டவாளத்திற்கு கீழ் பாதை அமைத்தல், கவாச் நிறுவுதல் உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். கவாச் நிறுவுதல் முக்கிய பட்டியலில் முதலில் இடம் பெறும்.

    2014-ம் ஆண்டு வாக்கில் ரெயில்வே பயன்பாட்டிற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது 2.62 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய நிலையை எட்டியுள்ளது.

    2014-க்கு முன் 60 ஆண்டுகளில் 20 ஆயிரம் கி.மீட்டர் ரெயில்வே தடம் மட்டும்தான் மின்சார தடமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுக்களில் 40 ஆயிரம் கி.மீட்டர் தடம் மின்சாரமாக்கப்பட்டுள்ளது. 2014-ல் சராசரியாக தினசரி 4 கி.மீட்டர் தூரம் புதிய தடத்திற்கான வேலை நடைபெற்றது.

    கடந்த நிதியாண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 14.5 கி.மீட்டர் வேலை நடைபெற்றது. நிதியாண்டு முழுவதும் 5300 கி.மீட்டர் புதிய தண்டவாளம் பணி நடைபெற்றது எனத் தெரிவித்துள்ளார்.

    • நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.
    • வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

    தங்கம், வெள்ளி, அலைபேசி உள்ளிட்ட விலை உயர் ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்கூட அன்றாடம் மக்களின் பசியைப்போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வேளாண்மையை முற்று முழுதாக அழித்துவிட்டு '2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம்' என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகாருக்கு 26000 கோடிகளும், ஆந்திராவிற்கு 15000 கோடிகளும் ஒதுக்கியுள்ள இந்நிதிநிலை அறிக்கை மூலம், இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா? நாட்டிலேயே ஆந்திராவில் மட்டும்தான் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளதா? தமிழ்நாட்டில் இல்லையா? இந்தியாவிலேயே அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்? தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி, வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாததைக் கண்டித்து 'வரிகொடா' இயக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு வேறுவழியில்லை எனும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது பாஜக அரசு.

    ஒட்டுமொத்தமாக பாஜக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

    • 2023-24 பட்ஜெட்டில் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
    • ஆண்டு மத்தியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டு செலவினம் 86 ஆயிரம் கோடி ரூபாய்.

    2024-25-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    ஊரக வளர்சித்துறைக்கு இந்த பட்ஜெட்டில் 1,77,566.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு பட்ஜெட்டை விட 12 சதவீதம் அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் 1,57,545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.

    கடந்த ஆண்டு மத்தியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் செலவு 1,71,069.46 ஆக இருந்தது. தற்போது அதைவிட 3.7 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    100 நாள் வேலை திட்டத்திற்காக 86 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதைவிட 43 சதவீதம் அதிகமாகும். கடந்த பட்ஜெட்டில் 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    எனினும் கடந்த ஆண்டு மத்தியில் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் மொத்தமாக 86 ஆயிரம் கோடி ரூபாய் செலவு என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அதே தொகையை ஒதுக்கியுள்ளது.

    2022-23 நிதியாண்டில் 73 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் 90,805 கோடி ரூபாய் செலவினம் பட்ஜெட் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்தியாவில் குடும்பத்தில் ஒருவருக்காவது வேலை உத்தரவாதம் என்பதை இந்த திட்டம் வழங்குகிறது.

    பிரதம மந்திரி அவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டம் மூலம் மேலும் இரண்டு கோடி வீடுகள் ஊரகப் பகுதியில் கட்ட 54,500.14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

    2023-24 நிதியாண்டில் 54,487 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    • மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.
    • நாளை நமது எம்பிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

    மத்திய பட்ஜெட் குறித்து முதலமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது,

    மத்திய பட்ஜெட் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தின் தேவைகளை முன்பே மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தோம். மெட்ரோ ரெயில் தமிழகத்திற்கான ரெயில்கள் குறித்து கேட்டிருந்தோம். மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க கேட்டிருந்தோம்.

    மைனாரிட்டி பாஜக அரசை மெஜாரிட்டி பாஜக அரசாக மாற்றி மாநிலங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வெள்ளம் குறித்த 2 மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் ஆய்வு செய்து சென்றனர். அதன் பின்னரும் தமிழகத்திற்கு எந்த நிதியையும் ஒதுக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

    மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே உச்சரிக்கப்பட வில்லை. மத்திய அரசின் சிந்தனையிலேயே தமிழகம் இல்லை.

    நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு ஒட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கும் வகையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த கூட்டத்தை புறக்கணிக்க போகிறேன்.

    தமிழகத்தின் தேவைகள், உரிமைகளை நிலைநாட்ட மக்கள் மன்றத்தில் தொடர்ந்து நாங்கள் போராடுவோம். நாளை நமது எம்பிகள் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் ஒருசில அம்சங்கள் உள்ளன.
    • தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது.

    அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    2024-2025ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

    மத்திய நிதி அமைச்சர் அவர்கள் இன்று 2024-2025ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்கள். அதன் முன்னெடுப்பாக நேற்று (22.7.2024), பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த 2023-2024ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில் 6.5 முதல் 7 சதவீதம் வரை நிலையான விலை விகிதப்படி (ஊடிளேவயவே யீசiஉநள) பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதத்தைவிட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி வேலை வாய்ப்பை உருவாக்குதல், திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்தல், வேளாண்துறை மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு (ஹஐ) மூலம் தொய்வடைந்துள்ள தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில் ஒருசில அம்சங்கள் உள்ளன.

    விவசாயத் துறை மேம்பாட்டுக்கு, பருவ நிலை மாற்றத்தை கருத்திற்கொண்டு உற்பத்தித் திறனை பெருக்கும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றில் சுய சார்பு நிலையை எட்டுதல், காய்கறி உற்பத்தியை நகர்ப்புற பகுதிக்கு அருகாமையில் பயிரிடுவதை ஊக்குவித்தல், விவசாய உற்பத்திக் குழுக்களை ஊக்குவித்தல் என்று ஒருசில அம்சங்கள் உள்ளன.

    எனினும், விவசாயிகள் இன்று உற்பத்தி செய்த பொருளை சந்தைப்படுத்துவதில் பெரும் சிரமத்தை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதற்கு அரசு கொள்முதல் உள்ளிட்ட சந்தை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் தொழில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் போன்றவற்றை பெருமளவில் ஊக்கப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.

    எனவே, தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது.

    அடுத்ததாக, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் அவர்களை தொழில் துறையில் தேவைப்படும் வேலைவாய்ப்புகளுக்கு தயார்படுத்துதல் போன்றவற்றில் ஒருசில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

    உதாரணமாக, பணியாளர் வருங்கால வைப்புநிதி (நுஞகு) அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் (டீசபயnணைநன ளுநஉவடிசள) முதன் முதலில் வேலைவாய்ப்பை பெறுபவர்களுக்கு ஓராண்டுக்கு ஊக்கத் தொகையையும், அந்த வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் முனைவோருக்கு ஊக்கத் தொகையையும் வழங்குவது சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும்.

    இதுதவிர, திறன் மேம்பாட்டிற்கான முயற்சிகள், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    ஆனால், கள அளவில் இந்த உதவிகளை கள அளவில் இந்த உதவிகளை கள அளவில் இந்த உதவிகளைப் பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன. பெறுவதில் பல சிரமங்கள் உள்ளன.

    எனவே, திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு, குறு தொழில்களுக்கு கடன் குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதிலும் உள்ள செயல்முறை ரீதியிலான பிரச்சனைகளை வழங்குவதிலும் உள்ள செயல்முறை ரீதியிலான பிரச்சனைகளைத்தீர்க்க வழிவகை தீர்க்க வழிவகை காண வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

    பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியின் பெரும் பகுதி தற்போது ஆட்சியிலுள்ள அரசின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு தொழில் வழிப்பாதை, (ஐனேரளவசயைட ஊடிசசனைடிச) சாலை கட்டமைப்பு மேம்பாடு, புது விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள், புதிய மின் திட்டங்கள், ஆந்திர பிரதேசத்திற்கு புதிய தலைநகருக்கான திட்டம், நீர் ஆதார திட்டங்கள் என பல திட்டங்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் சலுகைகளை வழங்கியிருப்பது, மத்திய அரசின் பாரபட்சமான நிலையைக் காட்டுகிறது.

    கோதாவரி- கோதாவரி-காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழ காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழ காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழகத்தினால் முன்மொழிந்த கத்தினால் முன்மொழிந்த போதிலும், போதிலும், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது, தமிழக விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. 

    அதேபோல், அதேபோல், இதே மத்திய அரசு அறிவித்த இதே மத்திய அரசு அறிவித்த இதே மத்திய அரசு அறிவித்த ஓசூர், கோயம்புத்தூர் பாதுகாப்பு சூர், கோயம்புத்தூர் பாதுகாப்பு தளவாடங்கள் தொழில்வழி திட்டமும் அறிவிப்பு செய்ததோடு கிடப்பில் போடப்பட்டுள்ளதை நான் குறிப்பிட விரும்புகிறேன். 

    அதேபோல், அதேபோல்,நடந்தாய் வாழி காவிரி திட்டம் நடந்தாய் வாழி காவிரி திட்டம் நடந்தாய் வாழி காவிரி திட்டம்(காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்) பற்றி (காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம்) பற்றி ஜனாதிபதி அறிவிப்பில் அறிவித்த ஜனாதிபதி அறிவிப்பில் அறிவித்ததோடு, இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்காமல் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. 

    வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் பீகார், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேஷ், உத்திரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கே பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படாதது ஒரு பெருத்த ஏமாற்றமாகும். 

    எப்போதும் செயல்படுத்துகிற ஊரக வளர்ச்சி திட்டங்கள், நகர்புற மேம்பாட்டு திட்டங்கள் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளன. பல அறிவிப்புகள் வரி சீர்திருத்தம் போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் செயல்படுத்தி எந்த அளவுக்கு வரி விதிப்பு முறைகள் எளிமைப்படுத்தப்படும் என்பதையும், அதனால் வரி செலுத்துவோரின் சிரமங்கள் குறைகிறதா என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இந்த தருணத்தில் இந்த தருணத்தில் GST வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பின்பும், தொழில் வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பின்பும், தொழில் முனைவோர் பல்வேறு நடைமுறை சிரமங்களைத் முனைவோர் பல்வேறு நடைமுறை சிரமங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர் என்பதைக்குறிப்பிட விரும்புகிறேன்.

    வரி விதிப்பைப் பொறுத்தவரை, சுங்க வரி விதிப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் உள்நாட்டு உற்பத்தித் திறனும், போட்டியிடும் திறனும் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்றுதான்.

    எனினும் நேரடி வரி விதிப்பில், எனினும் நேரடி வரி விதிப்பில், புதிய வரி விதிப்பு முறையை புதிய வரி விதிப்பு முறையை புதிய வரி விதிப்பு முறையைப் பின்பற்றுவோருக்கு பின்பற்றுவோருக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. மட்டும் ஆண்டுக்கு ரூ. 17,500 சேமிக்கக்கூடிய அளவில் வரி விகிதத்தில் மாற்றம் 17,500 சேமிக்கக்கூடிய அளவில் வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செய்யப்பட்டுள்ளது. இது இன்றைய சூழ்நிலையில் போதுமானதாக இல்லை என்பது என்னுடைய கருத்து. இதனால் வரி விதிப்பில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்திருந்த பொதுமக்கள் மத்தியில் இது ஒரு பெருத்த ஏமாற்றமே.

    இதுதவிர, பங்குச் சந்தை வரிவிதிப்பு முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

    பொதுவாக, கார்ப்பரேட்டுகள் அதிக லாபம் ஈட்டுகின்றனர் என்று பொருளாதார ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தும் அந்த அதிக லாபத்தை, வேலைவாய்ப்பு உருவாக்குவதில் அவர்கள் இதுவரை பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை ஊக்குவிப்பதற்கான எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

    எனவே, தனியார் துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கு துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கு துறை மூலம் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. 

    மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க- மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் நாடாளுமன்ற வின் நாடாளுமன்ற வின் நாடாளுமன்றத்தேர்தல் அறிக்கையில் அளித்த தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள் இந்த வரவு, பல வாக்குறுதிகள் இந்த வரவு,செலவுத்திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

    இந்த வரவு, செலவு அறிக்கையில் முதியவர்களுக்கான எந்த சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை. முதியோர்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு முதியோர்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்த சலுகைகளையாவது திரும்ப அளித்திருக்கலாம். 

    எனவே, இந்த வரவு, செலவு அறிக்கை வடமாநிலங்களையும், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்தியத் திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை.

    குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது. தமிழகத்திற்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்கு வாக்களித்து, 39 நாடாளுமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் வெற்றிபெறச் செய்தார்கள். திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் 2019 முதல் 2024-ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் நன்மைக்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தது போல், அமைதியாக காலம் தள்ளுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
    • தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

    பாமக நிறுவனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கம், வெள்ளி, செல்பேசிகள் உள்ளிட்ட பொருட்களின் மீதான சுங்கவரி குறைக்கப்பட்டிருப்பது. இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது. வேளாண்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது போன்றவை வரவேற்கத்தக்கவை. அதேநேரத்தில் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான பழைய வருமானவரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாததும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன.

    ஒரு நாட்டின் வளர்ச்சியைக் கடந்து மக்களின் நலனை உறுதி செய்ய வேண்டும் என்றால், கல்வி, சுகாதாரம், வேளாண்மை ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிலையான நிதிநிலை அறிக்கையில் இந்த 3 துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

    வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.1.52 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வேளாண் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும். காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும். அடுத்த இரு ஆண்டுகளில் ஒரு கோடி உழவர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஊரக வளர்ச்சித்துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2.66 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அரிசி வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை. இவை வேளாண் வளர்ச்சிக்கும், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கும் வழி வகுக்கும்.

    அடுத்து வரும் ஆண்டுகளில் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும். ஒரு கோடி இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகை.

    ஒருமுறை உதவியாக ரூ.6,000 நிதியுடன் தொழில்பழகுனர் பயிற்சி அளிக்கப்படும். முதல் முறையாக வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு முதல் மாதத்தில் மட்டும் இரட்டை ஊதியம் வழங்கப்படும், அரசின் வேறு எந்த சலுகைகளையும் பெறாதவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். தொழிலாளர்கள் தங்குவதற்காக வாடகை வீடுகள் கட்டித்தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வரவேற்கத்தக்கவை.

    தங்கம் மற்றும் வெள்ளி கடத்தலைத் தடுக்க அவற்றின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி முழுமையாக குறைக்கப்படவில்லை என்றாலும் கூட. 15 விழுக்காட்டிலிருந்து 6% ஆக குறைகப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியதாகும். அதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.4200 வரை குறையக் கூடும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்பது மட்டுமின்றி, தங்கம் கடத்தி வரப்படுவதையும் தடுக்கும். செல்பேசிகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டிருப்பதால் அவற்றின் விலையும் குறையும்.

    நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது வருமான வரிகளில் மாற்றங்கள் செய்யப்படுமா? என்பதைத் தான். புதிய வருமானவரி முறையில் சில மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதனால், ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாகும் என்பது வரவேற்கத்தக்கது.

    ஆனால், பழைய வருமான வரி முறையில் எந்த மாற்றமும் செய்யப்படாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. புதிய வருமானவரி முறை செலவுகளை ஊக்குவிக்கக்கூடியது. பழைய வருமான வரி முறை சேமிப்பை ஊக்குவிக்கக் கூடியதாகும். புதிய வருமானவரி முறையில் சலுகை வழங்கியதன் மூலம் செலவுகளை அரசு ஊக்குவிக்கிறது. இது குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றாலும், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு சேமிப்புகள் தான் கை கொடுக்கும் என்பதால் பழைய வருமானவரி விகிதங்களிலும் அரசு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

    ஆந்திரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிறப்புத் திட்டங்களில் ஒன்றான விசாகப்பட்டினம் & சென்னை இடையிலான தொழில்வழிச் சாலை திட்டத்தால் தமிழ்நாட்டிற்கும் பயன்கள் கிடைக்கும். அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப் படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள். பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது.
    • தங்கம் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத்தில் இன்று 2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.52,400-க்கும் கிராமுக்கு ரூ.275 குறைந்து ஒரு கிராம் ரூ.6,550-க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.3.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 92.50-க்கும் கிலோவுக்கு ரூ.3100 குறைந்து பார் வெள்ளி ரூ.92,500-க்கு விற்கப்படுகிறது.

    பட்ஜெட் அறிவிப்புக்கு முன்னதாக தங்கம் சவரனுக்கு ரூ.120 குறைந்து விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

    • பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.
    • தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

    மத்திய பட்ஜெட்டில் கூறி இருப்பதாவது:-

    * தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆகவும், வைரத்திற்கு 6.4 சதவீதம் ஆகவும் குறைக்கப்படுகிறது. பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சத வீதத்தில் இருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

    * பிளாஸ்டிக் பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்படுகிறது.

    * நேரடி வரி விதிப்பை எளிமைப்படுத்த தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    * வருமான வரி செலுத்து வோரிடம் 3-ல் 2 பங்கு பேர் புதிய நடைமுறைக்கு மாறியுள்ளனர்.

    * ஆன்லைன் வர்த்தகத் திற்கான டி.டி.எஸ். வரி குறைக்கப்படுகிறது. டி.டி.எஸ். தாக்கல் தாமதம் ஆவது இனி கிரிமினல் குற்றமல்ல.

    * குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20 சதவீத குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.

    * 2 முறையாக இருந்த வரி செலுத்துவது ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே முறையாக மாற்றப்படும்.

    * வெளிநாடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 40 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக வரி குறைக்கப்படும்.

    * உற்பத்தி துறையில் 5 ஆண்டுகளில் 1 கோடி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி தரப்படும்.

    * மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் உதவித்தொகை தரப்படும்.

    * 500 பெரிய நிறுவனங்களில் தொழில் பயிற்சி பெற இளைஞர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

    * நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளுக்கான புதிய தீர்ப்பாயங்கள் அமைக்கப் படும். தீர்ப்பாயம் அமைக் கப்படுவதால் ஏராளமான வழக்குகள் தீர்த்து வைக் கப்படும்.

    * நாடு முழுவதும் 20 தொழிற்பேட்டைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    * பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1 கோடி வீடுகள் கட்டப்படும்.

    * நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தில் ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * மகளிர் சார்ந்த திட்டங்க ளுக்கு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    * மாநில அரசுகள் பத்திரப்பதிவு கட்டணங்களை குறைக்க வேண்டும்.

    * 4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆக குறைக்கப்படும்.
    • புற்றுநோய் மருந்துகள், தோல் பொருட்கள், கடல்சார் உணவுகளும் விலை குறைகிறது

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ளார். காலை 11 மணிக்கு சபை கூடியதும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள இறக்குமதி வரி குறைப்பு விவரம் வருமாறு:

    தங்கம், வெள்ளி ஆகியவற்றிற்கான இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து வரி 6.4 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    செல்போன், செல்போன் உதிரி பாகங்களின் இறக்குமதி வரி 15 சதவீதம் ஆக குறைக்கப்படும்.

    சில குறிப்பிட்ட தோல் பொருட்களுக்கான வரி விதிப்புகளும் குறைக்கப்படும்.

    மருத்துவ உபகரணங்கள், சில மருந்துகளுக்கு சுங்க வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சூரிய ஒளி மின்சாரத்திற்கு பயன்படும் கருவிகளுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.

    இதையடுத்து இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் மற்றும் செல்போன் போன்றவைகளின் விலை குறைகிறது.

     

    மேலும் புற்றுநோய் மருந்துகள், தோல் பொருட்கள், கடல்சார் உணவுகளும் விலை குறைகிறது

    இதேபோல் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுங்கவரி 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் ஆக அதிகரிக்கப்படும்.

    தொலைத்தொடர்பு சாதனங்களுக்கான சுங்க வரி 10ல் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

    அம்மோனியம் நைட்ரேட், பிளாஸ்டிக் சாதனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களின் விலை உயர்கிறது.

    • பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • சமீப காலமாக ரெயில் விபத்துகள் நடந்தபோதும் மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இதன் தொடர்ச்சியாக இன்று மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் தொடர்ந்து 7-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து உள்ளார்.

    இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. ஒன்றரை மணி நேரம் பட்ஜெட் உரையாற்றிய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு என்ற பெயரை ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு ரூ.15 ஆயிரம் கோடியும், பீகாருக்கு ரூ.26 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் பீகாரை தவிர்த்து வேறு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கப்படவில்லை. கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மேற்கு வங்காளம், மணிப்பூர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    இதனிடையே, வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக அசாம், இமாச்சல பிரதேசம், உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கிய நிலையில், கடந்த டிசம்பர் மாதம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு எந்த நிதியுதவியும் அறிவிக்கப்படாதது கண்டித்து தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, தாம்பரம் - செங்கல்பட்டு விரைவுச் சாலை திட்ட ஒப்புதல், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

    இதனிடையே, சமீப காலமாக ரெயில் விபத்துகள் நடந்தபோதும் மத்திய பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

    முன்னதாக, தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள திட்டங்கள் உள்ளிட்டவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 21-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×