search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager"

    • சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.
    • ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை அபிராமபுரம் சி.பி.ராமசாமி சாலை, பிம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே அடுக்கு மாடி குடியிருப்பு வாசலில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை முதலமைச்சர் சென்ற சாலையில் தடையை மீறி வாலிபர் ஒருவர் ஓட்டிச் சென்றார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபரின் பெயர் அஜய்குமார் என்பது தெரியவந்தது. ஐ.டி. ஊழியரான அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    • கார் சாவியை பறித்து தலையில் வெட்டி துணிகர கொள்ளை
    • 5 பேர் கும்பலுக்கு போலீசார் வலை

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள நீலாம்பூரை சேர்ந்தவர் பிரசாந் (வயது29). கால்டாக்சி டிரைவர்.

    சம்பவத்தன்று இவர் இரவு பணியில் இருந்த போது கால்டாக்சி ஆப் மூலமாக சின்னியம்பாயைத்தில் இருந்து டீச்சர் காலனி செல்வதற்கு கார் புக்கிங் செய்யப்பட்டது.

    இதனையடுத்து டாக்சி டிரைவர் பிரசாத் புக் செய்யப்பட்ட இடத்துக்கு சென்றார். அங்கு நின்று கொண்டு இருந்த 5 வாலிபர்கள் காரில் ஏறினர்.

    அப்போது அவர்கள் வெங்கடாபுரத்தில் நண்பர் ஒருவரை இறக்க வேண்டும் என்றனர். இதனையடுத்து பிரசாத் காரை ஓட்டிக்கொண்டு மாநராடு மைதானம் அருகே சென்று காரை நிறுத்தினார்.

    அப்போது 5 பேரும் சேர்ந்து திடீரென பிரசாத்தி டம் கார் சாவியை பறித்த னர். அவர்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது தலையில் வெட்டினர். பின்னர் பிரசாத்திடம் இருந்து ரூ.6 ஆயிரம் பணம் மற்றும் 3 செல்போன்களை பறித்த னர். அவர்கள் 5 பேரும் சேர்ந்து பிரசாத்தை மிரட்டி காருடன் ராவுத்தூர் ரெயில்வே கேட் அருகே சென்றனர். பின்னர் காரை கொடுத்து மிரட்டி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கால்டாக்சி டிரைவர் பிரசாத் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால்டாக்சி புக் செய்து டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற 5 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
    • வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

    கோவை,

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கிராமப்பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்தநிலையில் சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    கடந்த 12-ந் தேதி சிறுமியும், அவரது தாயும் ஆடுகளை மேய்க்க சென்றனர். அப்போது சிறுமி தனது தாயிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். சிறுமி வீட்டிற்கு நடந்து செல்வதை பார்த்த வாலிபர் தன்னுடைய வீட்டில் யாரும் இல்லை, வா பேசிக்கொண்டு இருக்கலாம் என கூறி சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    அப்போது அவர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி 2 முறை வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் சிறுமி இல்லை.

    அவரை தேடி சென்ற போது சிறுமி வாலிபரின் வீட்டிற்குள் இருந்து அழுது கொண்டே வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் அவர் தனது மகளிடம் என்ன நடந்தது என கேட்டார். அப்போது வாலிபர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஜாலியாக இருந்து விட்டு பின்னர் திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறி கதறி அழுதார்.

    இதனை கேட்ட அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுகுறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • சிறுமியின் தந்தையிடம் உன் மகளை நான் தான் கட்டுவேன் என மிரட்டல்.
    • மாணவியின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியை அவரது தந்தை மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.

    மோட்டார் சைக்கிள் கோட்டூர் ரோட்டில் சென்ற போது ஜோதி நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் (வயது 19) என்பவர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினார். அவர் சிறுமியின் தந்தையிடம் உன் மகளை நான் தான் கட்டுவேன்.

    உன்னால் என்ன பண்ண முடியுமோ அதை நீ பண்ணு என கூறி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மாணவியின் தந்தை பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறுமியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த சக்திவேல் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • நன்னிலம்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அங்கு சந்தேகப்படும்படி நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

    திருவாரூர்:

    நன்னிலம் சுற்றுவட்டார பகுதியில் நன்னிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திருக்கண்டீஸ்வரம் முடிகொண்டான் ஆற்றுப்பாலம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், நன்னிலம் பகுதியை சேர்ந்த கோவிந்தவேல் (வயது 23) என்பதும், அவர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தவேலை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    பாலா மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பெருமுக்கல் ஏரிக்கரை அருகே வழிப்பறியில் ஈடுபட்ட பாலா (வயது 31). இவர் மீது பல்வேறு வழிபறி, கொலை முயற்சி மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதுபோன்ற சமூக விரோதி செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சசாங்சாய் பரிந்துரையின் பேரில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி ஆணைக்கிணங்க பாலாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு சென்றதால் பரபரப்பு
    • வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி.

    இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியிடம் திரு மணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கேரளாவுக்கு கடத்தி சென்றார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் சிறுமி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எந்த பலனும் இல்லை.

    அப்போது சிறுமி அவரது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தான் கேரள மாநிலம் வடக்கஞ்சேரிக்கு வாலிபருடன் வந்து விட்டதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சமரசம் பேசியபோது தகாத வார்த்தைகளால் திட்டினார்
    • குடிபோதையில் இருந்ததால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சக்திநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது23). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது நேராக வீட்டிற்கு செல்லாம், அந்த பகுதியில் இருந்த தண்ணீர் தொட்டி அருகே சென்றார்.

    பின்னர் வேக, வேகமாக தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்ததும் அந்த பகுதி மக்கள் அங்கு திரண்டு விட்டனர்.

    அவர்கள் மணிகண்டனை கீழே இறங்கி வரும்படி கூறினர். ஆனால் அவர் இறங்க மறுத்ததுடன், தன்னை அழைத்தவர்களை தகாத வார்த்தைகளால் பேசினார். தொடர்ந்து அவர்கள் ரகளையில் ஈடுபட்டு கொண்டே இருந்தார்.

    இதுகுறித்து பொது மக்கள், ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து, தண்ணீர் தொட்டி மீது நின்றிருந்த வாலிபரிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவரை கீழே அழைத்து வந்தனர்.

    பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததால் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரிடம் இன்று பேலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வைத்திலிங்கபுரத்தை சேர்ந்தவர் கருணாகர பிரபு (வயது33). இவருக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இவர் மது பழக்கத்திற்கு அடிமையானதால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். தன்னை மறு வாழ்வு மையத்தில் சேர்க்குமாறு தாயிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தாய் விரைவில் ஏற்பாடு செய்வதாக கூறி உள்ளார்.

    மன உளைச்சலில் இருந்த அவர் 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அப்போது தாயும், மனைவியும் காப்பாற்றினர். இந்த நிலையில் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டி கொண்டார். சிறிது நேரம் கழித்து மனைவி கதவைத் தட்டியபோது திறக்கவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கருணாகரபிரபு மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்தி மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
    • கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் சாக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்தவர் கார்த்தி (வயது 41).

    இவர் மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதையடுத்து இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப்புக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி, கார்த்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை
    • பெங்களூக்கு சென்று மாணவியை மீட்டு போலீசார் விசாரணை

    கோவை,

    கோவை அருகே உள்ள கணுவாயை சேர்ந்த 16 வயது மாணவி.

    இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம் கள்ளக்கு றிச்சியை சேர்ந்தவரும், பெங்களூரில் வசித்து வரும் 19 வயது வாலிபர் ஒரு வருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரி வித்தனர்.

    மேலும் தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து மாணவி அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக வாலிபர் கோவைக்கு வந்து மாணவியை பெங்களூருக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.மாணவி மாயமானது குறித்து அவரது பெற்றோர் தடாகம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் மாணவி அவரது காதலனுடன் பெங்களூரில் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் பெங்களூக்கு சென்று மாணவியை மீட்டனர். அவரை அழைத்து சென்று பலாத்காரம் செய்த வாபரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ சடத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆசை வார்த்தைகளை தெரிவித்து பலாத்காரம் செய்தது அம்பலம்
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(20). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஜெகதீசுக்கு சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் கடந்த மாதம் 3-ந் தேதி சிறுமி தனது வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஜெகதீஷ், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு யாரும் இல்லாத போது சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை தெரிவித்து, அவரை பலாத்காரம் செய்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டதும் பெற்றோர் அதிர்ச்சியாகினர். சம்பவம் குறித்து தங்களது மகளிடம் விசாரித்தனர். அப்போது சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்தார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.

    போலீசார் ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×