search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Udayanidhi Stalin"

    • சென்னையின் கார் பந்தய பாதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
    • கார் ஓட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    'பார்முலா 4' கார் இந்தியன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் பந்தயத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹக் பார்ட்டர் வெற்றி பெற்றார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னையின் கார் பந்தய பாதை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இது மிகவும் அருமையாக இருந்தது. அதிக வேகம், குறைந்த வேகம் மற்றும் நடுத்தரமான வேகம் ஆகிய பிரிவின் கலவையாக பந்தய பாதை இருக்கிறது. இங்கு கார் ஓட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஐரோப்பியாவில் உள்ள மொனாக்கோ ஸ்பீட் சர்க்கி யூட்டில் பங்கேற்று இருக்கிறேன். சென்னை கார் பந்தய சாலை எனக்கு மொனாக்கோவை நினைவுபடுத்தியது. ஆனாலும் எனக்கு மிகவும் பிடித்த கார் பந்தய பாதையில் ஒன்றாக சென்னை இருக்கிறது.

    இவ்வாறு பார்ட்டர் கூறியுள்ளார்.

    • உதயநிதி ஸ்டாலின் மூலம் இன்று பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.
    • 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை உதயநிதி வழங்கினார்.

    சென்னை:

    மெரினா கடற்கரை- பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதிகளுக்கு தினந்தோறும் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பொதுமக்களாலும், அங்குள்ள கடைகளாலும் மணற்பரப்பு அசுத்தம் ஆகிறது.

    எனவே, மாநகராட்சி பணியாளர்கள் மெரினா பெசன்ட் நகர் கடற்கரையினை பொலிவுடன் கண்காணிக்க ஏதுவாகவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக, அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய நான்கு சக்கர அதிநவீன கடற்கரை மோட்டார் வாகனங்கள் தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சம் மதிப்பில் 3 ரோந்து வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பயன்பாட்டிற்கு வழங்கினார்.

    மேலும், மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 3.5 மீ. கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க மனிதர்களை பயன்படுத்தாமல் ரோபோடிக் மல்டி பர்பஸ் எக்ஸ்கவேட்டர் போன்ற அதிநவீன எந்திரங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதனடிப்படையில் தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எக்ஸ்கவேட்டர் ரூ.22.80 கோடி மதிப்பில் லிச்டென்ஸ் டைன் நாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் இன்று பயன்பாட்டிற்கு வழங்கப் பட்டது.

    மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்ய 7 எந்திரங்கள் 2019 ஆண்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த எந்திரங்களின் தேய்மானத்தின் காரணமாக எந்திரங்களின் முழு திறனைபெறுவதற்கு ஏதுவாக, முதற்கட்டமாக 2 எந்திரங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டு தற்பொழுது பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதனால் கடற்கரை மணற் பரப்பினை சுத்தம் செய்யும் பணிகள் திறம்படவும், துரிதமாகவும் மேற்கொள்ளப்படும்.

    சென்னை மாநகராட்சி யில் பணிபுரிந்து பணியிடை காலமான பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அப்பணியாளர்களின் வாரிசுதாரர்களான 253 ஆண்கள், 158 பெண்கள் என மொத்தம் 411 நபர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருணை அடிப்படையில் 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

    • சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
    • எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர்.

    அரியலூர்:

    அரியலூரில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    போக்குவரத்து துறையின் மூலம் சென்னையில் தற்போது தாழ்தள பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவுற்ற பிறகு மின்சாரப் பேருந்துகள் செயல்பாட்டிற்கு வர உள்ளது.

    சென்னையில் கையடக்க கருவியோடு டிக்கெட் வழங்குகின்ற கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் மற்ற போக்குவரத்துக் கழகங்களிலும் அடுத்தடுத்த கட்டங்களில் அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எங்களை போன்ற தொண்டர்கள் எல்லாம் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக வேண்டும் என்று காத்திருக்கிறோம்.

    பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எச்.ராஜா தான் தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கானவர். உதயநிதி செயல்பாட்டை மக்கள் அறிவார்கள். அதனால் தான் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகி உள்ளார்.

    ஆனால் எச்.ராஜா தொடர்ந்து மக்களால் ஒதுக்கி தள்ளப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமி ஒரு அடிப்படை அரசியல் கூட தெரியாமல் முதல்வரானவர். நாணயம் வெளியீடு என்பது ஒரு அரசு விழா. அரசு விழா நடைபெறும் போது மத்திய அரசு, மாநில அரசு இணைந்து பங்கேற்புடன் நடைபெற்று உள்ளது.

    தி.மு.க. சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் போது அதில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பது வழக்கமாக உள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி தனது முதுகை முதலில் பார்க்கட்டும். பிறகு மற்றவர்களை விமர்சிக்கட்டும். காய்ந்த மரம் கல்லடிபடும் என்ற அடிப்படையில் ஆளுங்கட்சியை எல்லோரும் விமர்சிப்பது வழக்கம்.

    அதுபோல சீமான் விமர்சிக்கிறார். ஊடக வெளிச்சம் வர வேண்டும் என்பதற்காக தரக்குறைவான விமர்சனங்களை சொல்கிறார். அவர்களெல்லாம் மக்களால் ஒதுக்கி தள்ளப்படுவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக்கிடுங்க.
    • கவுன்சிலர் தம்பதி கறிவிருந்த வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

    தமிழக விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்கள் சிலரும் இதனை பொதுவெளியில் கருத்தாக கூறி வருகின்றனர்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்வர் ஆவார் என்ற வகையில் தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் எப்படியாவது துணை முதலமைச்சர் ஆக வேண்டும் என்று சிவகங்கையை சேர்ந்த கவுன்சிலர் தம்பதி ஊருக்கே கறிவிருந்து வைத்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

    சிவகங்கை மாவட்ட, சாலைகிராமத்தை சேர்ந்த செல்வி சாத்தையா என்ற கவுன்சிலர் கூறும்போது, "விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அவர் தமிழகத்தின் துணை முதலமைச்சர் ஆக வேண்டியும், ஊரில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் கிடாய் விருந்து வைத்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுக்கிறோம்," என்றார்.

    மேலும், இந்த தம்பதியின் கறி விருந்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.


    • கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்க திட்டம்.
    • வருகிற 16-ந்தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

    சென்னை:

    தி.மு.க.வில் அடுத்த சட்டசபை பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் கட்சி அமைப்புகளை மாற்றி அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

    இப்போது தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் மூத்த அமைச்சர்கள், மூத்த மாவட்ட செயலா ளர்கள் பொறுப்பு வகிக்கும் மாவட்டங்களில் மட்டும் 5 சட்டசபை தொகுதிகள் இடம்பெற்று உள்ளன. மற்ற மாவட்டங்களில் இதைவிட தொகுதிகள் குறைவாக உள்ளது.

    இப்போது அதிகாரத்தை பரவலாக்கும் வகையில் சென்னையில் 3 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க தலைமை ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அதே வேளையில் வெளி மாவட்டங்களில் 2 சட்ட சபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்கவும் பரிசீலனை நடந்து வருகிறது.

    இதற்கேற்ப 117 மாவட்டச் செயலாளர்களை கொண்டு வர தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

    இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வைத்துள்ளதாகவும் விரைவில் அதை செயல்படுத்த கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்புதல் பெறுவார் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பொறுப்பு வகிக்கும் சென்னை கிழக்கு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்படும் என தெரிகிறது.

    அமைச்சர் மா.சுப்பிரமணியன் வசமிருக்கும் சென்னை தெற்கு மாவட்டம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் வசம் உள்ள காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், க.சுந்தர் எம்.எல்.ஏ. வசம் உள்ள காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் மேலும் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டச் செயலாளர்களை உருவாக்கும் திட்டம் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

    இதுதவிர தென்காசி மாவட்டம் விருதுநகர் மாவட்டம், கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களை மேலும் பிரித்து 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    ஒலிம்பிக் போட்டியை பார்க்க சென்றிருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வந்ததும் ஓரிரு நாளில் தி.மு.க. தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் மாவட்டங்களை மேலும் பிரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. எனவே விரைவில் தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் வரும் என தெரிகிறது.

    இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் 2026 சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்படக் கூடும் என தெரிகிறது.

    • உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • 88 புதிய பஸ்கள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்கள்.

    சென்னை:

    சென்னையில் மாநகர் போக்குவரத்து கழகத்தின் 88 புதிய பஸ்கள் மற்றும் 12 புதுப்பிக்கப்பட்ட பஸ்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் முன்னிலை வகித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்த துடன் புதிய பஸ்சில் ஏறி சிறிது தூரம் வரை பயணம் செய்தார். அவருடன் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தயாநிதி மாறன் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர்.

    புதிதாக துவக்கி வைக்கப்பட்ட பஸ்கள் பிராட்வே, கிளாம்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி, திருப்போரூர், திருவொற்றியூர், திருவேற்காடு, தி.நகர், மகாபலிபுரம், திருவான்மியூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நீல நிறத்தில் விடப்பட்டு உள்ள இந்த பஸ்களில் தானியங்கி கதவுகள், டிஜிட்டல் பலகை, மாற்றுத்திறனாளிகள் பஸ்சில் ஏறுவதற்கு சிறப்பு சாய் தளம், சி.சி.டி.வி. கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

    • நீலாங்கரையில் இன்று காலை நடைபெற்றது.
    • திராவிட மாடல் அரசு எப்போதும் உங்களுடன் துணை நிற்கும்.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 2 ஆயிரத்து 7 குடும்பங்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நீலாங்கரையில் இன்று காலை நடைபெற்றது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    சோழிங்கநல்லூர் பகுதி யைசேர்ந்த 2 ஆயிரம் பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்குகிற இந்த சிறப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு உங்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை அளித்து கொண்டு இருக்கிறது.

    நமது அரசு ஏழை, எளிய, அடித்தட்டு, நடுத்தர மக்களுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.

    தி.மு.க.வும், திராவிட மாடல் அரசும் எப்போதும் உங்களுடன் துணை நிற்கும். அதே போல் நீங்களும் கழகத்துக்கும், நம்முடைய அரசுக்கும் பக்கபலமாக இருந்து வரு கிறீர்கள்.

    தேர்தல் சமயத்தில் உங்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தேன். சென்னையில் பட்டா பிரச்சனை பல வருடமாக இருக்கிறது. அப்படி பட்டா கிடைக்காமல இருப்பவர்களுக்கு நிச்சயம் பட்டா வழங்க உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தேன்.

    தேர்தல் முடிவுகள் வந்து 2 மாதங்கள் தான் ஆகிறது. இந்த 2 மாதத்திற்குள் முதலமைச்சர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்து உள்ளார்.

    பல வருடமாக பட்டா இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது பட்டா கிடைத்து உள்ளது. திராவிட மாடல் அரசு இன்றைக்கு பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த திட்டங்கள், சாதனைகளை எல்லாம் நீங்கள் அத்தனை பேருக்கும் எடுத்து சொல்ல வேண்டும். உங்களுக்காக திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்க தயாராக இருக்கிறது. எங்களை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரன், மா.சுப்பிரமணி யன், அரவிந்த்ரமேஷ் எம்.எல்.ஏ, வீட்டுவசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், எழிலன் எம்.எல்.ஏ., மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், 15-வது மண்டலகுழு தலைவரும், பகுதி செயலாளருமான மதியழகன், பாலவாக்கம் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பட்டிதொட்டியெங்கும் சென்று அயராது உழைக்க வேண்டும்.
    • 2026 சட்டசபை தேர்தல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புது வியூகம்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளதால் இதே வெற்றியை 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார்.

    இதற்காக தி.மு.க.வில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் தி.மு.க.வில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டிருந்த பொறுப்பாளர்களை அழைத்து அவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்றிரவு விருந்தளித்தார்.

    தனது குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற இந்த விருந்தில் அவருடன் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, ஆஸ்டின், தாயகம் கவி ஆகியோரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

    பின்னர் அவர்கள் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, `தொகுதி பொறுப்பாளர்களின் பணிகளை வெகுவாக பாராட்டினார். இந்த பணி 2026 சட்டசபை தேர்தலுக்கும் தொடர வேண்டும். கிராமம் கிராம மாக சென்று தி.மு.க. ஆட்சியின் திட்டங்களை மக்கள் மத்தியில் பேச வைக்க வேண்டும் என்று கூறினார்.

    இதுதவிர பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். கூட்டம் நடந்தது பற்றி உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

    கழகத்தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ள, 2026 சட்ட மன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல்பட்டு வரும் தொகுதி பார்வையாளர்களை குறிஞ்சி இல்லத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினோம்.

    பாராளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் கழகம் வெற்றி பெற சிறப்புற பணியாற்றிய தொகுதி பார்வையாளர்களுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்.

    மேலும், நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களையும்-சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத் தருகிற வகையில் அயராது உழைப்போம் என்று உரையாற்றினோம்.

    இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

    • இந்து வாழ்வியலே சனாதானம்.
    • இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த மேல்சிறுணை கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பா. ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனாதானம் என்பது என்ன? என்று உச்ச நீதிமன்றமே கூறிவிட்டது. இந்து வாழ்வியலே சனாதானம்.

    சனாதனத்தில் கூறியுள்ள உணவு, கல்வி, மருத்துவம் போன்றவை தற்பொழுது மிகப் பெரிய வியாபாரமாக மாறிவிட்டது, சனாதனம் பற்றிய எதிர்ப்பு தமிழகத்தில் 180 ஆண்டுகளுக்கு மேலாக காதில் விழுந்து கொண்டிருக்கிறது.

    சனாதன தர்மத்தில் கூறியுள்ளது போல் கட்டணம் இல்லாமல் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சானாதனத்தை தொடர்ந்து எதிர்த்து பேசி வருகிறார்.

    உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் இந்து தர்மத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடத்தை போலீசார் அவசர அவசரமாக சுட்டுக் கொன்றது ஏன்? இதில் ஆரம்பக்கட்டத்தில் இருந்தே எதிர்கட்சிகள் அனைவரும் சி.பி.ஐ. விசாரணை கொண்டு வந்தால் தான் உண்மை நிலவரம் தெரியவரும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது.
    • உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதில் ராயப்பேட்டையில் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டம், வழித்தடம் 4-ல் பவானி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் எந்திரம் மூலம் ராயப்பேட்டை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுரங்கம் அமைக்கப்படுகிறது.

    இதற்காக 910 மீட்டர் நீளத்திற்கு துளையிடும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு பணியினை தொடங்கி வைத்தார்.

    அப்போது அவரிடம் அதிகாரிகள் மெட்ரோ ரெயில் பணிகள் குறித்து விளக்கி கூறினார்கள். இதன் பிறகு ஆலப்பாக்கம் இரண்டு அடுக்கு மெட்ரோ ரெயில் பாதை, பூந்தமல்லி புறவழி மெட்ரோ ரெயில் நிலையம் பூந்தமல்லி மெட்ரோ பணிமனை ஆகியவற்றில் நடைபெற்ற பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேற்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, சேப்பாக்கம் மதன் மோகன் உள்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைப்பார் என்றும் பேசப்படுகிறது.
    • உயர் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதலமைச்சர் ஆவார் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையை விரைவில் மாற்றி அமைப்பார் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பிறந்த நாளுக்கு அமைச்சர்கள் பலர் அவரது வீட்டுக்கு நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    மூத்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் சபரீசனை சந்தித்து வாழ்த்து கூறியதால் கட்சியில் அவரது முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளதாகவே கருதப்படுகிறது.

    அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதால் இந்த முறை சபரீசனை சந்திக்க அமைச்சர்கள் பலர் ஆர்வம் காட்டியதாக கட்சி நிர்வாகிகள் கருத்து பரிமாறிக் கொண்டனர்.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எந்தெந்த அமைச்சர்கள் அதிக ஓட்டு வாங்கினார்கள். எந்த அமைச்சர்களுக்கு ஓட்டு குறைந்தது என்ற பட்டியல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையில் இருப்பதால் சில அமைச்சர்களின் இலாகாக் களை மாற்றி விடுவாரோ என்ற ஐயப்பாடும் சில அமைச்சர்களிடம் நிலவி வருகிறது.

    இந்த சூழ்நிலையில் தான் சபரீசனை பார்த்து வாழ்த்து சொல்ல நேற்று முன்தினம் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் அதிகம் பேர் சென்றதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அன்றைய தினம் காலை 10.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுமார் 10 அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனையும் நடத்தி இருக்கிறார்.

    சபரீசனை சந்தித்து வாழ்த்து சொன்ன அந்த அமைச்சர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 10 அமைச்சர்கள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் பங்கேற்றதாகவும் அப்போது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, முதல்-அமைச்சரின் செய லாளர்கள், முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளும் உடன் இருந்ததாகவும தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த கூட்டத்தில் அரசு நிர்வாகம் மட்டுமின்றி 2026 தேர்தல் வர இருப்பதை யொட்டி இனி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி பேசியதாகவும் தெரிகிறது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருப்ப தால் அதற்கு முன்னதாக இந்த ஆலோசனையில் பல்வேறு விசயங்கள் பேசப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

    அன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் விக்கிரவாண்டி தேர்தலில் ஓட்டு குறைந்த அமைச்சர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கேட்டதாகவும், சில அமைச்சர்கள் 'டோஸ்' வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

    • மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
    • அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக அமெரிக்காவுக்கு இந்த மாதம் பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் அடுத்தடுத்து பல்வேறு தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதால் அவரது வெளிநாட்டு பயணம் சற்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவுக்கு செல்வார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் ஆட்சியிலும், கட்சியிலும், அரசு நிர்வாகத்திலும் சில அதிரடி மாற்றங்களை செய்வார் என்று தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், விரைவாக பொருளாதார வளர்ச்சியை எட்டவும், அதிகாரிகளை மாற்றும் நடவடிக்கைகளை அவர் கையில் எடுத்துள்ளார்.

    சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளை மாற்றி அமைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரே நாளில் 65 ஐ.ஏ.எஸ். அதி காரிகளை இடமாற்றம் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் நிர்வாக ரீதியாக மேலும் சில மாற்றங்கள் செய்து விட்டு அமைச்சரவையிலும் மாற்றங்கள் செய்ய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

    குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

    தற்போது அதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக தலைமைச் செயலக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக நியமனம் செய்து அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அடுத்த மாதம் 15-ந்தேதி சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு கொடியேற்றி வைக்க உள்ளார்.

    அதன் பிறகு ஓரிரு நாளில் அவர் வெளிநாடு செல்வார் என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அமைச்சரவை மாற்றத்தின் போது சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களில் மாற்றம் செய்யப்படும் என்று தெரிகிறது. தங்கம் தென்னரசு உள்பட சில மூத்த அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளன. அவற்றை பிரித்து வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

    இதன் மூலம் அமைச்சரவையில் புதுமுகங்கள் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த புதுமுகங்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பார் கள் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு ஏற்ப அமைச்சரவையை மாற்றம் செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

    அமைச்சர் தங்கம் தென்னரசு தற்போது நிதி மற்றும் மின்சாரத் துறையை கவனித்து வருகிறார். இது அவருக்கு அதிக சுமையாக கருதப்படுகிறது. எனவே அவரிடம் உள்ள நிதி இலாகாவை வேறு ஒரு வருக்கு வழங்க ஆலோசிக்கப்படுகிறது.

    ஏற்கனவே நிதி அமைச்ச ராக இருந்த பழனிவேல் தியாகராஜன் வசம் மீண்டும் நிதி இலாகா ஒப்படைக்கப்படும் என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தகவல்கள் தி.மு.க. வட்டாரத்தில் மிகுந்த விறு விறுப்பை ஏற்படுத்தி உள்ளன.

    தி.மு.க.வில் உள்ள நடுத்தர வயதுள்ள பல எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர் பார்க்க தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக தி.மு.க. நிர்வாகிகள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    அமைச்சரவையில் சரியாக செயல்படாத சில ரை கட்சிப் பணிக்கு அனுப்பவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. மூத்த தலைவர்களிடம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. எனவே அமைச்சரவை மாற்றம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


    இதற்கிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குவதற்கு தி.மு.க. மூத்த தலைவர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தீவிர கட்சி பணிகளிலும், ஆட்சி பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலின் போது அவர் 40 தொகுதிகளுக்கும் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அவர் தனி கவனம் செலுத்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது.

    அதுபோல விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் 2 நாட்கள் அவர் செய்த பிரசாரம் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. எனவே அவருக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்கும் பட்சத்தில் கட்சி பணிகளையும் மேம்படுத்த முடியும் என்று தி.மு.க. மூத்த தலைவர்கள் நம்புகிறார்கள்.

    தமிழக சட்டசபைக்கு இன்னும் 1½ ஆண்டுகளில் தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் சுமார் 200 இடங்களை கைப்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்த இலக்கை எட்டிப்பிடிக்க இப்போதே அதிரடி மாற்றங்களை செய்யத் தொடங்கி உள்ளார்.

    உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவதன் மூலம் ஆட்சி நிர்வாகத்தை மேலும் எளிமைப்படுத்தி விரைவு படுத்த முடியும் என்றும் கருத்து நிலவுகிறது. எனவே அடுத்த அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

    ×