என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wild elephant"

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி யானைகள் வயல்வெளி களுக்குள் புகுந்து விடுவது வழக்கம்.
    • கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடைக்குள் யானை புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு, பொருந்தலாறு, தேக்கந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு யானைகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வயல்வெளி களுக்குள் புகுந்து விடுவது வழக்கம். தற்போது கோடை க்காலம் என்பதால் அடி க்கடி யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் வனப்பகு தியை ஒட்டியுள்ள பகுதி களில் உள்ள விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறு த்தியுள்ளனர்.

    இந்நிலையில் பழனி - கொடைக்கானல் சாலையில் தேக்கந்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடை க்குள் யானை புகுந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இரை தேடி வந்த ஒற்றை யானை அந்த பெட்டிக்க டையை உடைக்க முயலும் காட்சி அதில் பதிவாகியு ள்ளது. ஆனால் நீண்ட நேரமாக அந்த கடையில் நின்று கொண்டு இருந்த யானை அதன் பிறகு அங்கி ருந்து நகர்ந்து சென்றது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறை யினருக்கு தகவல் தெரி வித்துள்ளனர்.

    குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலங்களுக்குள் யானை வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ள னர். மேலும் கோடை காலம் முடியும் வரை யானை களுக்கு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டியில் நீரை தேக்கி வைக்கவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனத்துறையினர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது தண்ணீர், உணவு தேடி ஊருக்குள் நுழைந்து வருகின்றன.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீகூர் வனசரகத்திற்குட்பட்ட ஆனைகட்டி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆனைகட்டி பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் வனத்துறையினர், வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டனர்.

    பின்னர் கால்நடை டாக்டர்கள் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். யானை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. யானை உடல் நிலை சரியில்லாமல் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யானை வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
    • வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன.

    கவுண்டம்பாளையம், -

    கோவை தடாகம் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகின்றன.

    அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருவதை வாடி க்கையாக வைத்து ள்ளது.

    பன்னிமடையை அடுத்த வரப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் வீடு ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த தோட்டத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது.

    அந்த யானை தோட்டத்திற்குள் அங்கும், மிங்கும் சுற்றி திரிந்தது. பின்னர் வீட்டின் அருகே சென்ற காட்டு யானை வீட்டின் கதவை உடைத்தது. தொடர்ந்து உள்ளே நுழைந்த காட்டு யானை அங்கு வைக்கப்பட்டிருந்த மாட்டுத் தீவனங்களை உண்ண முயன்றது.

    ஆனால் யானையால் மேற்கொண்டு வீட்டிற்குள் செல்ல முடியவில்லை.

    இதனால் யானை அங்கு இருந்த பொருட்கள் அனைத்தையும் தேசப்படுத்தி விட்டு மீண்டும் வனத்தை நோக்கி சென்று விட்டது.

    இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவாகியுள்ளது.

    அந்த காட்சிகள் தற்போ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    கோடைக்காலம் துவங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் எப்போது வேண்டுமா னாலும் ஊருக்குள் நுழையக்கூடும் என்பதால், வனத்துறையினர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானை நடமாடி வருகிறது.
    • இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-வன பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதி அடர்வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவி லங்குகள் அவ்வப்போது ஊருக்கு நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானை நடமாடி வருகிறது. மேலும்,பாகுபலி காட்டு யானையுடன் தற்போது வேறு சில யானைகளும் இணைந்து அதே பகுதியில் சாலையை கடக்க துவங்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் பகுதி வழியாக சாலையைக்கடந்து மற்றொருபுறம் சென்றது.

    அப்போது, யானை வருவதை கண்ட அங்கு சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று யானையை பார்த்து குரைக்க தொடங்கியது.

    இதனால் ஆவேசம் அடைந்த பாகுபலி யானை பிளிறிய படியே நாயை விரட்டி சென்றது.

    பின்னர் அங்கிருந்து விளை நிலங்களை நோக்கி சென்று விட்டு, மீண்டும் வனப்பகுதியை நோக்கி நடந்தது.

    தற்போது பாகுபலி யானை தன்னை பார்த்து குரைத்த நாயை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பாகுபலி யானையை கண்டதும் நாய் குரைத்ததையும், குரைத்த நாயை பார்த்த காட்டு யானை தெருநாயை விரட்டுவதையும் படத்தில் காணலாம்.

    • விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்
    • வீடுகளுக்குள் முடங்கிய கிராம மக்கள்

    குடியாத்தம்:

    ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது. அந்த சரணாலயத்தில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளது.

    யானைகள் அட்டகாசம்

    யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து குடியாத்தம் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள கிராமப்புறங்களில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தன.

    கடந்த சில மாதங்களாக யானைகள் தொல்லை சற்றே குறைந்திருந்தது, ஆங்காங்கே ஓரிரு யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களைசேதப்படுத்தி வந்தது.விவசாயிகள் யானைகள் கூட்டம் குறைந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களாக யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

    நேற்று அதிகாலை 2 யானைகள் வி.டி.பாளையம் ஊராட்சி கொத்தூர் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே புகுந்தது.

    இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வெளியில் வர பயந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர். அந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது.

    யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து மாமரங்கள், கேழ்வரகு, நெற் பயிர்களை நாசம் செய்தது இதனால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன.

    இதனையடுத்து விவசாயிகள் ஒன்று திரண்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் விரட்டியதில் விவசாயி சுந்தர்ராஜ் சிறுகாயங்களுடன் உயிர்த்தப்பினார்.

    கிராம மக்கள், விவசாயிகள் யானைகளை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் அடர்ந்த ஆந்திர காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

    அடிக்கடி இப்பகுதிக்குள் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதால் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் மாலை நேரத்திலேயே கிராம மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.

    யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    குற்றச்சாட்டு

    வனத்துறையினர் யானைகளை விரட்டுவதில் அக்கறை காட்டுவதில்லை .காலையில் வந்து சேதம் அடைந்த விளைநிலங்களை பார்வையிட்டு சேத விவரங்களை கேட்டு செல்கின்றனர் ஆனால் இரவில் தினம்தோறும் உயிருக்கு அச்சத்துடனே வாழ்ந்து வருகிறோம் அலட்சியத்துடன் செயல்படும் குடியாத்தம் வனத்துறையினர் மீது உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

    சைனகுண்டா, பரதராமி, கொட்டாளம் ஆகிய 3 இடங்களில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது.இந்த சோதனை சாவடிகள் ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ளது.

    இந்த சோதனை சாவடிகளில் பணியாற்றும் வனத்துறையினர் சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யாமல் பணம் வசூலிப்பது குறியாக உள்ளனர்.அதில் காட்டும் அக்கறை, யானைகளை விரட்டுவதில் காட்டுவதில்லை என குற்றம் சாட்டினர்.

    • மற்றொரு இடத்தில் மோட்டார் சைக்கிளையும் தாக்க முயன்றதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
    • டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார்

    அரவேணு,

    கோத்தகிரி மலைப்பாதை யில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் மலைப்பாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரிந்து வருகின்றன.

    அவ்வப்போது மலைப்பா ைதயில் வந்து நின்று கொண்டு, அந்த வழியாக வரும் வாகனங்களையும் மறித்து வருவது வாடிக்கை யாகி உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மாலை கோத்தகிரி சாலையில் தட்டப்பள்ளம் என்ற இடத்தில் உள்ள வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை மலைப்பாதைக்கு வந்தது.அப்போது அந்த வழியாக ஜீப் ஒன்று வந்தது. யானை வருவதை பார்த்த ஜீப் டிரைவர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்த முயன்றார்.அப்போது ஒற்றை யானை ஜீப்பை நோக்கி வேகமாக வந்தது. வந்த வேகத்தில் யானை ஜீப்பை தாக்கியது. இதனால் வாகனத்தில் இருந்தவர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர்.

    பின்னர் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு வாகனத்தை பின்னோக்கி இயக்கினார். சிறிது நேரத்தில் யானை அங்கிருந்து சென்று விட்டது.

    இதன் பின்னரே ஜீப்பில் இருந்தவர்களும், பின்னால் வந்த வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர்.இதையடுத்து ஜீப்பை டிரைவர் அங்கிருந்து வாகனத்தை எடுத்து சென்றார்.கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்சி முனை பகுதியில் நீண்ட நேரமாக ஒற்றைக் காட்டு யானை மேய்ச்சலில் ஈடுபட்டது.

    இதனால் அந்த சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சாலையை கடக்க முயன்றனர்.அப்போது, யானை ஆக்ரோஷம் அடைந்து அவர்களை நோக்கி வந்தது. இதனால் பயந்து போன மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்தவர் இறங்கி ஓடி விட்டார்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் சாதுர்யமாக வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து தப்பியோடி விட்டார். தற்போது இந்த வீடியோக காட்சிகள் சமூக வலைத ளங்களில் வைரலாகி வருகிறது.

    கோத்தகிரி-மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால் வனத்துறையினர் யானை களை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேற்கு மலைத் தொடர்ச்சி வனப்பகுதி என்பதால் யானைகள் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும்.
    • வனப்பகுதியில் உள்ள பெரிய பாறையின் மீது யானை நின்றதை பார்த்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

    வடவள்ளி,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதியில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோவில் முருக கடவுளின் 7-ம் படை வீடு என்று அழைக்கப்படும்.

    கோவை மாவட்டத்தின் மிக முக்கிய ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இக்கோவில் உள்ளது. மேற்கு மலைத் தொடர்ச்சி வனப்பகுதி என்பதால் யானைகள் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும். இதனால் வனத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக மாலை 7 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.

    இந்த நிலையில் கடந்த சித்ரா பவுர்ணமி அன்று மாலை 4 மணி அளவில் மருதமலை கோவிலுக்கு செல்லும் வாகன வழிப்பாதையின் அருகே வனப்பகுதியில் உள்ள பெரிய பாறையின் மீது யானை நின்றது.

    கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வந்து சென்ற போது யானை பொதுமக்கள் கண்ணில் பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு வந்தவர்கள் பலர் வாகனத்தை நிறுத்தி பார்த்தனர். அதனால் மருதமலை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்து வனத்துறையினர். யானையை வனத்திற்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பாறையின் முகடில் ஒய்யாரமாக யானை நின்றது. சுமார் 1 மணிநேரத்திற்கு பின் யானை வனத்திற்குள் சென்று மறைந்தது. மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் யானை வந்ததால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு நிலவியது.

    • பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.
    • பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திராவில் இந்த யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.

    ஜோடியாக வந்த காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜோலார்பேட்டை கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகிறது.

    யானைகள் நேற்று தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன. அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.

    பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.

    அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.

    நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.

    கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்திலிருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை அங்கிருந்து வனப் பகுதிகளுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    ஆவேசமாக யானைகள் ஓடியது. பூசாரி ஊர் கிராமத்தை ஒட்டிய நிலத்தில் மாசிலாமணி என்பவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. யானைகள் பசுமாடு மீது மோதியது. நிலைகுலைந்து விழுந்த பசுமாட்டினை யானைகள் காலால் மிதித்தன.

    இதில் உடல் நசுங்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. அங்கிருந்த காட்டு யானைகள் சோமநாயக்கன் பட்டி வழியாக திரியாலம் ஏரிக்குள் சென்றது.

    நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.

    சின்ன கம்மியம்பட்டு கிராமத்திற்குள் சென்றன. அங்கிருந்த வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்டினர்.

    அப்போது யானைகள் அவர்களை நோக்கி திரும்பி வந்து விரட்டியது. அந்த நேரத்தில் லோகேஷ் (வயது 28) என்ற வாலிபர் தவறி கீழே விழுந்தார்.

    அவரை காட்டு யானை தனது துதிக்கையால் தூக்கி வீசி விட்டு திரும்பி சென்றன.

    இதில் படுகாயம் அடைந்த லோகேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காட்டு யானைகள் இன்று அதிகாலை ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றன.

    இதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    யானைகள் ஏலகிரி மலையில் ஏற வாய்ப்பு இல்லை. மலை ஓரமாக சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் கோவைக்கு வந்துள்ளனர்.

    கோவை:

    ராஜஸ்தான் மாநிலம் சவாய்மடபூரை சேர்ந்தவர் கமல்ஸ்ரீமல். இவரது மகன் விஷால் ஸ்ரீமல் (வயது 23).

    இவர் ராஜஸ்தானில் உள்ள கோட்டா ஆராய்ச்சி பல்கலைக்கழகத்தில் வனவியல் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் விஷால் ஸ்ரீமல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தனது ஆராய்ச்சி படிப்புக்காக கோவை ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு வந்தார்.

    அவர் ஆராய்ச்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி, விஞ்ஞானியான ரித்திகா கலை என்பவரிடம் ஆராய்ச்சி படிப்பினை மேற்கொண்டு வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு விஷால் ஸ்ரீமல் தனது நண்பர்களுடன் சாப்பிட சென்றார். பின்னர் அங்குள்ள உணவு கூடத்தில் இருந்து பாட்டிலில் தண்ணீரை நிரப்பி கொண்டு அறைக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அங்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் விஷால் ஸ்ரீமல் மற்றும் அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக விஷால் ஸ்ரீமல் யானையிடம் சிக்கிக் கொண்டார்.

    யானை அவரை தூக்கி வீசியதுடன், காலால் மிதித்தது. இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆராய்ச்சி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சத்தம் போட்டு யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த விஷால் ஸ்ரீமலை மீட்டு சிகிச்சைக்காக கேரள மாநிலம் புட்டத்துறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆராய்ச்சி மாணவர் விஷால் ஸ்ரீமல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மாணவர் இறந்த தகவல் ராஜஸ்தானில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு, உறவினர்கள் கோவைக்கு வந்துள்ளனர். அவர்களிடம் உடலை ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது.

    கோவையில் யானை தாக்கி ஆராய்ச்சி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து வனவிலங்குகள் வருகின்றன.
    • ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    கோத்தகிரி

    கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பகுதிகளில் அதிக அளவு பலாத்தோட்டங்கள் இருப்பதால் பலாப்பழங்களை உண்பதற்கு தோட்டங்களை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் இருந்து யானை, கரடி போன்ற வன விலங்குகள் சாலையில் தற்போது அதிகமாக நடமாடி வருகின்றது . இப்பகுதியில் கடந்த 4 மாதங்களாக சுற்றி தஞ்சமடைந்து வந்த ஒற்றை காட்டு யானை ஒன்று அவ்வப்போது சாலையில் செல்லும் வானங்களை சேதப்படுத்தியும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தியும் வந்தது. கடந்த ஒரு வாரமாக வாகன ஓட்டிகளின் கண்களில் அகப்படாத அந்த யானை நேற்று மாலை குஞ்சப்பனை பகுதியில் உள்ள சாலையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சிறை பிடித்தது சாலையின் நடுவில் நின்றிருந்த யானையால் அப்பகுதியில் வாகனங்கள் மேலும் கீழும் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையில் நின்றிருந்த அந்த யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது. இந்த ஒற்றை காட்டு யானையால் அடிக்கடி வாகன ஓட்டிகள் இது போன்ற நிலைக்கு தள்ளப்படுவதால் அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு துரத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது

    • பொதுமக்கள் கூடுவதால் டீ விற்பனை களைகட்டியது
    • யானையை பின் தொடரும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக 2 காட்டு யானைகள் சுற்றி வருகிறது. யானைகள் நடமாட்டத்தை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    உடன் மாவட்ட வன அலுவலர் நாகசதிஷ் கடிஜாலா, வருவாய் கோட்டாட்சியர் இலட்சுமி, உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார், தாசில்தார் சிவப்பிரகாசம், வனச்சரக அலுவலர் பிரபு, வனத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    யானைகளை வனப்பகு திக்கு விரட்ட 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது அதில் ஒரு குழுவினர் யானை பின் பக்கமாக எந்த பக்கம் நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர்.

    மற்றொரு குழுவினர் யானை முன் பக்கமாக இருந்து எந்த பகுதிக்கு நோக்கி செல்கிறது என கண்காணித்து வருகின்றனர்.

    மேலும் 3 குழுவினர் யானை முகாமிட்டுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    யானைகளை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே யானை நாட்டறம்பள்ளி பகுதியில் இருந்து காட்டு பகுதிக்கு சென்று இருக்கும் பொது மக்கள் யானையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்து யானைக்கு தொந்தரவு செய்ததால் தான் அது காட்டிற்குள் செல்ல முடியாமல் ஏலகிரி மலை மலையடிவாரத்தில் நோக்கி வந்தது.

    ஜலகாம்பாறை, ஜடையனூர் மிட்டூர் வழியாக ஆலங்காயம் காப்புக்காட்டு பகுதி வழியாக ஜம்னாமரத்தூர் வனப்பகுதிக்கு சென்று விடும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில் 5-வது நாளான இன்று அதிகாலை வெங்காயப்பள்ளி பகுதியில் இருந்து காட்டு யானைகள் கருப்பனூர் அன்னான்டபட்டி பகுதி வழியாக லட்சுமி நகர் பகுதியில் உள்ள ஏரியில் குளித்து விட்டு முகாமிட்டுள்ளது.

    இதனால் ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து யானை இன்று திருப்பத்தூர் நோக்கி சென்றது.

    அப்போது பொது மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர். அங்கு டீ வியாபாரம் களை கட்டியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக யானை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முகாமிட்டுள்ளதால் பொது மக்கள் பீதியில் உள்ளனர். யானை காட்டு பகுதிக்கு சென்றால் தான் பொது மக்கள் நிம்மதி கிடைக்கும்.

    யானை பின் தொடரும் பொது மக்களின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்து உள்ளார்.

    • மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
    • 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தது

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டத் தில் 6 நாட்களாக சுற்றித் திரிந்து அட்டகாசம் செய்து வந்த 2 காட்டு யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட் டது.

    கிருஷ்ணகிரி மாவட் டம் மற்றும் தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் 6 பேரை கொன்ற 2 காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் முகா மிட்டன.

    அதன் பின்னர் நாட்டறம்பள்ளி மற்றும் ஜோலார்பேட்டை, திருப்பத் தூர் சுற்றுவட்டார பகுதி களில் 6 நாட்களாக அட்டகாசம் செய்து வந்தன.

    இதனால் மாவட்ட நிர்வா கம் சார்பில் கும்கி யானை களை வரவழைக்க நடவ டிக்கை மேற்கொண்டனர். அதன்படி நேற்று காலை பொள்ளாச்சி ஆனைமலை பகுதியில் இருந்து சின்னத்தம்பி.

    முதுமலை பகுதியில் இருந்து உதயன் மற்றும் வில்சன் என மொத்தம் 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

    மயக்க ஊசி செலுத்தி...

    இந்த நிலையில் ஆனை மலை காப்பகத்தின் மருத்து வக்குழுவினர் ராஜேஷ் தலைமையில் வந்தனர். மயக்க ஊசி செலுத்தியானை களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    திப்பச முத்திரம் ஏரி பகுதியில் முகா மிட்டிருந்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட் டது.

    சிறிது நேரத்தில் அதே இடத்தில் ஒருயானைபிடிபட் டது. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு யானை பிடிபட்டது. பிடி பட்ட யானையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார்.

    2 யானைகளையும் லாரியில் ஏற்றினர். பின்னர் ஓசூர் அருகே உள்ள உரிகம் காட்டில் யானைகளை இறக்கி விட்டனர். 2 யானைகளும் காட்டுக்குள் சென்றன.

    ×