ஆன்மிக களஞ்சியம்

தாயின் கருவறையிலே வேலை செய்யும் கிரகங்கள்

Published On 2024-07-02 10:59 GMT   |   Update On 2024-07-02 10:59 GMT
  • ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.
  • ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன

மனிதனின் உடலில் பஞ்சபூதம் இயங்கும் ஆனால் ஒரு தாயின் கருவறையில் இருக்கும் குழந்தைக்கு நான்கு பூதம் தான் வேலை செய்யும் தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளியே வந்த பின்பு தான் 5வது பூதம் தன் வேலையை செய்யும்.

இதைத் தான் ஜோதிடத்தில் குழந்தை பிறந்த நேரம் லக்கனம் எடுத்துக் கொண்டும் அன்றயை சோச்சாரப்படியும் ஜாதகம் கணிப்பார்கள்.

குழந்தை பிறந்த பின்புதான் நவகிரகங்கள் வேலை செய்யும், என்றால் இந்த கிரகங்கள் தாயின் கருவறையில் இருந்தே வேலை செய்யும். இதைத்தான் கர்பகாலம் சென்ற இருப்பு என ஜாதகத்தில் எழுதுவார்கள்.

நவகிரகங்கள் கர்ப்பகாலத்தில் எவ்வாறு தன் வேலையை செய்கிறது என்பதை பற்றி பார்ப்போம்.

கர்ப்பம்

1. முதல் மாதம் சுக்கிரனின் ஆளுகை விந்து இன்னும் திரவ நிலையிலேயே இருக்கும்.

2. இரண்டாம் மாதம் அதிபர் செவ்வாய் உருவம் பெற ஆரம்பிக்கிறது.

3. மூன்றாம் மாதத்திற்கு குரு அதிபதி ஆகிறார். அங்கங்கள் உருவாகின்றன.

4. நான்காம் மாதம் சூரியன் எலும்புகள் உருவாகின்றன.

5. ஐந்தாம் மாதம் சந்திரன் தோல் தோன்றுகிறது.

6. ஆறாம் மாதம் சனி உரோமங்கள் உருவாகின்றன.

7. ஏழாம் மாதம் புதன் நரம்பு மண்டலங்கள் விருத்தி செய்கின்றன.

8. எட்டாம் மாதம் லக்ன அதிபதி. தொப்புள் கொடி மூலம் குழந்தை உணவு எடுத்துக்கொள்கிறது.

9. ஒன்பதாம் மாதம் சூரியன்: கர்ப்பத்திலுள்ள சிசு தாகம், பசி இவைகள் உணர வைக்கிறார்.

10. பத்தாம் மாதம் சந்திரன்: பிரசவத்திற்கு தயாராக்குகிறார்

இவ்வாறு நவகிரகங்கள் தன் வேலையை கர்பகாலத்தில் செய்கின்றன.

Tags:    

Similar News