உதவி செய்து பிறர் உள்ளத்தைக் கவரும் மேஷ ராசி நேயர்களே!
கார்த்திகை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் அஷ்டமத்தில் சஞ்சரிக்கின்றார். அவரோடு பஞ்சமாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்திருக்கின்றார்கள். எனவே போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். இட மாற்றங்கள், வீடு மாற்றங்கள் எதிர்பார்த்தபடி அமையும். பொருளாதாரப் பற்றாக்குறை தீர எடுத்த புதுமுயற்சி பலன்தரும்.
வக்ர குருவின் ஆதிக்கம்
மாதம் முழுவதும் மேஷ ராசியில் குரு பகவான் வக்ர இயக்கத்தில் இருக்கின் றார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவரது வக்ர இயக்க காலத்தில் பெற்றோர் வழியில் சில பிரச்சினைகள் வரலாம். அண்ணன்-தம்பிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பூர்வீக சொத்துகளை விற்கும் சூழ்நிலை ஒருசிலருக்கு உருவாகும். விரயங்கள் அதிகரிக்கும்.
பயணங்களால் பலன் கிடைக்காது. எனவே எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. விரயாதிபதியாகவும் குரு விளங்குவதால் திடீர், திடீரெனச் செலவுகள் வந்து மனதை வாடவைக்கும். ஏதேனும் ஒரு பொருள் வாங்கவோ அல்லது சுபகாரியங்கள் நடத்தவோ சேமித்த தொகை வேறு வழியில் செலவாகலாம். வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானை உள்ளன்போடு வழிபடுவதன் மூலம் நல்ல செயல்கள் நடைபெற வழி பிறக்கும்.
துலாம்-சுக்ரன்
உங்கள் ராசிக்கு 2, 7ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். தன சப்தமாதிபதியான சுக்ரன் மாதத் தொடக்கத்தில் நீச்சம் பெற்றிருக்கின்றார். எனவே மாதத் தொடக்கத்தில் மகிழ்ச்சி குறைவாகவே இருக்கும். மனதில் நினைத்ததை மறு கணமே செய்ய முடியவில்லையே என்ற கவலை இருக்கும். ஆயினும் கார்த்திகை 14-ம் தேதி துலாம் ராசிக்கு சுக்ரன் பெயர்ச்சியாகி வருகின்றார்.
சப்தமாதிபதி பலம்பெறும் இந்த நேரத்தில் கல்யாண வாய்ப்புகள் கைகூடும். இல்லறம் நல்லறமாக அமையும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. பொருளாதார நிலை உயரும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வரும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவதோடு சம்பள உயர்வு வருவதற்கான சூழ்நிலையும் உருவாகும்.
தனுசு-புதன்
உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானம் எனப்படும் இடத்திற்கு கார்த்திகை 14-ம் தேதி வருகின்றார். அங்கிருந்தபடி தன் வீட்டைத் தானே பார்ப்பது நன்மை தான். வழக்கு கள் சாதகமாக முடியும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியக் குறைபாடு கள் அகலும். ஆதாயம் தரும் விதத்தில் பயணங்கள் உண்டு.
மறைமுக எதிர்ப்புகள் மாறும். மாற்றினத்தவர்கள் உங்கள் கூட்டு முயற்சிக்கு உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கூடுதலாகக் கிடைக்கும்.