கிரிக்கெட் (Cricket)
இந்தியா- நியூசிலாந்து போட்டியை ஷிகர் தவானுடன் கண்டுகளித்த நடிகர் ரஜினிகாந்த்
- பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
- நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது.
தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர்.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மேலும், ரஜினி ஷிகர் தவானுடன் போட்டியை காணும் புகைப்படம் வரைலாகி வருகிறது.