கிரிக்கெட்
கேஎல் ராகுல் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.. இஷான் கிஷன் தான் சரியான ஆளு.. கவாஸ்கர்
- 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.
- 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இடம் பெற்றுள்ளனர்.
இஷான்கிஷன் 5-வது வரிசையில் இடம்பெற்றால் 4-வது வீரராக விளையாடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் இடையே போட்டி நிலவும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
4-வது வரிசையில் ஆடுவதற்கு ஸ்ரேயாஸ் அய்யர், ராகுல் இடையே போட்டி இருக்கும். இஷான்கிஷன் பேட்ஸ்மேனாக களம் இறங்கினால் ராகுல் விக்கெட் கீப்பிங் செய்வார். ராகுலுக்கு சில கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக பணியாற்றுவது நல்லது.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.