கிரிக்கெட் (Cricket)

ஹர்மன்பிரீத் கவுர்

ஹர்மன்பிரீத் 143 ரன்கள் விளாசினார்... 2வது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 333/5

Published On 2022-09-21 17:20 GMT   |   Update On 2022-09-21 17:20 GMT
  • ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் அடித்தனர்.
  • இங்கிலாந்து அணி, 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

இந்தியா-இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் அடிக்கப்பட்டது.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஆட்டமிழக்காமல் 111 பந்துகளில் 18 பவுண்டரி, 4 சிக்சர்களுடன் 143 ரன்கள் விளாசினார். ஹர்லின் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் அடித்தனர்.

இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 47 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. அதன்பின்னர் நிதானமாக ஆடியது.

Tags:    

Similar News