கிரிக்கெட்

ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு பிசிசிஐ நோட்டீஸ்

Published On 2023-02-24 07:41 GMT   |   Update On 2023-02-24 07:41 GMT
  • ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
  • இதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

மும்பை:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளும் வரும் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 17-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரோகித் சர்மாவுக்கு முதல் போட்டியில் மட்டும் ஓய்வு தரப்பட்டுள்ளதால், அதில் மட்டும் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார்.

எனவே ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு தேர்வான வீரர்கள் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஆஜராக சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அங்கு வீரர்களுக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறும் வீரர்கள் மட்டுமே இந்திய அணி முகாமில் இணைவார்கள்.

ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் முன்கூட்டியே என்.சி.ஏவுக்கு வரவழைத்துள்ளனர். யுவேந்திர சாஹல் மற்றும் உமான் மாலிக் ஆகியோர் ஏற்கனவே பெங்களூரில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News