வீரர்களுக்கு தண்ணீர் கேன் கொடுக்க வந்தேன்- சதம் அடித்த கேஎல் ராகுல் நெகிழ்ச்சி
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
- மைதானத்திற்கு எந்த உபகரணத்தையும் நான் கொண்டு வரவில்லை.
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் இந்தியா 356 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் 128 ரன்னில் சுருண்டது. இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் சதம் அடித்து அசத்தினர்.
கேஎல் ராகுல் காயம் காரணமாக ஓய்வு பெற்று வந்த முதல் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரின் பார்வையும் தன் பக்கம் திருப்பினார்.
இந்நிலையில் வீரர்களுக்கு தண்ணீர் கேன் கொடுக்கும் வேலையைதான் செய்வேன் என நினைத்தேன் என கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
போட்டிக்கான டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு நீ இந்த போட்டியில் விளையாடுகிறாய் என ராகுல் டிராவிட் கூறினார். மைதானத்திற்கு எந்த உபகரணத்தையும் நான் கொண்டு வரவில்லை. வீரர்களுக்கு தண்ணீர் கேன் கொடுக்கும் வேலையைதான் செய்வேன் என நினைத்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.