கிரிக்கெட்

உலகின் எந்த இடத்திலும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை: பிசிசிஐ

Published On 2022-12-30 05:26 GMT   |   Update On 2022-12-30 05:26 GMT
  • மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பும் (எம்.சி.சி.), விக்டோரியா மாகாண அரசும் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது.
  • எதிர் காலத்தில் அல்லது எந்த நாட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக திட்டங்கள் எதுவும் இல்லை.

மும்பை:

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 2007-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டி நடைபெறவில்லை. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் கிளப்பும் (எம்.சி.சி.), விக்டோரியா மாகாண அரசும் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும் போது, எதிர் காலத்தில் அல்லது எந்த நாட்டிலும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்காக திட்டங்கள் எதுவும் இல்லை. யாருக்காவது அத்தகைய விருப்பம் இருந்தால் அதை அவர்களே வைத்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News