கிரிக்கெட்

விராட் கோலி குறித்து கவலைப்படுவதை நிறுத்துங்கள்: சஞ்சய் மஞ்ச்ரேக்கர் காட்டம்

Published On 2024-06-22 13:08 GMT   |   Update On 2024-06-22 13:08 GMT
  • சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
  • நடப்பு தொடரில் இந்திய அணியின் விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை.

மும்பை:

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேச அணியை இன்று எதிர்கொள்கிறது.

நடப்பு தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 24 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

எனவே அவரை மீண்டும் 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும் என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய ரசிகர்களும் வல்லுனர்களும் விராட் கோலியின் பார்ம் குறித்து கவலைப்படுவதை நிறுத்தவேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் பேசியதாவது:

விராட் கோலி பார்மில் இருக்கிறாரா, இல்லையா என்பதை பற்றி யோசிப்பதை நிறுத்துங்கள்.

இந்திய கிரிக்கெட்டை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அசத்துவதை போல், பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 விதமான சூழ்நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார். அதாவது அமெரிக்காவை விட அவர் இங்கே இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்.

உலகின் இதர தலைசிறந்த பவுலர்களுக்கும் பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.

இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் பும்ராவை வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News