கிரிக்கெட்

முதல் டி20 போட்டி: டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு

Published On 2024-07-27 13:04 GMT   |   Update On 2024-07-27 13:04 GMT
  • இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.
  • தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற கம்பீருக்கு இது முதல் தொடராகும்.

பல்லகெலே:

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்திய டி20 அணி கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுகிறார்.

இந்நிலையில், இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீருக்கு இது முதல் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News