ஆன்மிகம்

நவராத்திரி பிரம்மோற்சவம்: திருப்பதி கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கை

Published On 2018-10-12 05:18 GMT   |   Update On 2018-10-12 05:18 GMT
நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி தமிழக பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 10 டன் மலர்கள் காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி நாடு முழுவதிலிருந்தும் பக்தர்கள் பலர் ஏழுமலையான் கோவிலுக்கு காய்கறிகள், மலர்கள், வாழை இலைகள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இருந்து ரோஜா, சம்பங்கி, மல்லிகை உள்பட பல்வேறு வகையான மலர்களை பக்தர்கள் காணிக்கையாக வழங்கி உள்ளனர். அந்த மலர்கள் திருமலைக்கு கொண்டுவரப்பட்டன. அத்துடன் திருச்செங்கோடு பக்தர்கள் இளநீர், மா இலைகள், 10 ஆயிரம் ரோஜா செடிகளை மலர்களுடன் காணிக்கையாக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள மாரியம்மன் கோவில் புஷ்ப கைங்கர்ய சபை சார்பில் மருதுசாமி என்பவர் பல்வேறு வகையான மலர்களை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். தமிழகத்தில் இருந்து 10 டன் மலர்கள் திரு மலைக்கு காணிக்கையாக வந்துள்ளது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News