ஆன்மிகம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

Published On 2019-02-18 10:12 GMT   |   Update On 2019-02-18 10:12 GMT
இந்த மாதம் பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி செல்ல உகந்த நேரம் என்னவென்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

இந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று (திங்கட்கிழமை) இரவு 11.53 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 9.32 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.

Tags:    

Similar News