செய்திகள் (Tamil News)

விவசாயிகளை அச்சுறுத்துவது ஜனநாயக விரோத போக்கு- திருநாவுக்கரசர்

Published On 2018-06-12 04:59 GMT   |   Update On 2018-06-12 04:59 GMT
8 வழிச்சாலை பசுமை திட்டத்தில் விவசாயிகளை காவல் துறையினர் மூலம் அச்சுறுத்துவது ஜனநாயக மக்கள் விரோத போக்கு என்று திருநாவுக்கரசர் கூறினார். #congress #thirunavukkarasar
ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆய்வு மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் ராஜபாளையத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் சேலம்- சென்னை 8 வழி பசுமை சாலை திட்டத்தில் ஆட்சியாளர்கள் காவல்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி, அவர்களின் நிலத்தை அபகரிக்க முயல்வது ஜனநாயக மக்கள் விரோத போக்காகும்.

சமீப காலமாக சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. இப்பிரச்சனை நிகழாமல் இருக்க மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப காவல்துறை எண்ணிக்கையை அதிகரித்து மக்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மோடி ஆட்சியில் மத்திய அரசின் சார்பிலோ அல்லது மாநில அரசின் சார்பிலோ எந்த தொழில் நுட்பமும் கடந்த நான்கு ஆண்டுகளில் தொடங்கப்படவில்லை. இதனால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சியின்மை நாட்டில் ஏற்பட்டுள்ளது.

குஜராத், பீகார் போல் தமிழகத்திலும் பூரண மது விலக்கு அமல்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் தமிழகம் முழுவதும் விரைவில் போராட்டம் நடத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தளவாய்பாண்டியன், ராஜ பாளையம் நகர கமிட்டி நிர்வாகி சங்கர்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். #congress #thirunavukkarasar
Tags:    

Similar News