உள்ளூர் செய்திகள் (District)

தி.மு.க.பிரமுகரிடம் ரூ.2 லட்சம் அபேஸ்

Published On 2023-09-27 09:23 GMT   |   Update On 2023-09-27 09:23 GMT
  • துறையூரில் தி.மு.க.பிரமுகரிடம் பட்டப்பகலில் ரூ.2 லட்சம் அபேஸ் செய்யப்பட்டு உள்ளது
  • வங்கியிலிருந்து எடுத்து வந்த போது மர்ம நபர்கள் கைவரிசை

துறையூர்,

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சிக்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிறுநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது45). இவர் உப்பிலி யபுரம் தெற்கு தி.மு.க. ஒன்றிய துணைச் செயலா ளராக இருந்து வருகிறார். துறையூர் - திருச்சி சாலையில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கி லிருந்து ரூ. 2 லட்சம் பண த்தை எடுத்து, இரு சக்கர வாகனத்தின் பின்பகுதியில் வைத்துக்கொண்டு சென்று ள்ளார். நீதிமன்றம் எதிரே உள்ள கடையின் முன்பு இரு சக் கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்து ள்ளார். அப்பொழுது அடை யாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தின் பின்பகுதியை கள்ள சாவி மூலம் திறந்து, பணத்தை எடுத்துள்ளார். இதனைப் பார்த்த சுப்பிர மணியன் திருடன், திருடன் என சத்தம் போட்டு உள் ளார். இதனை அறிந்த மர்ம நபர் ஏற்கனவே தயார் நிலையில் இருந்த தன்னு டைய கூட்டாளியின் இருச க்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்று விட்டார். இச்சம்பவம் தொடர்பாக சுப்பிரமணியன் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த துறையூர் போலீசார், அப்பகுதியில் பொருத்த ப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூரில் வங்கியில் இருந்து எடுத்துவரப்பட்ட பணத்தை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படு த்தி உள்ளது.

Tags:    

Similar News