உள்ளூர் செய்திகள்
சக்கரப்பட்டி சித்தர் கோவிலில் 10-ம் ஆண்டு குருபூஜை விழா
- கோப்பணம் பாளையத்தில் உள்ள சக்கரப்பட்டி சித்தர் கோயிலில் 10-ம் ஆண்டு குருபூஜை பெருவிழா நேற்று நடைபெற்றது.
- விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு மேல் யாகவேள்வி நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே கோப்பணம் பாளையத்தில் உள்ள சக்கரப்பட்டி சித்தர் கோயிலில் 10-ம் ஆண்டு குருபூஜை பெருவிழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 9 மணிக்கு மேல் யாகவேள்வி நடைபெற்றது. 12.30 மணிக்கு மேல் மகேஸ்வர பூஜையும், மாலை 5 மணிக்கு மேல் சித்தர் திருவீதி உலா வலம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
குருபூஜை விழாவில் சித்தரின் சமாதிக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடைபெற்றது.
இதில் பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குருபூஜைக்கான ஏற்பாடுகளை சக்கரப்பட்டி சித்தர் கோயில் பக்தர்கள் செய்திருந்தனர்.