ஆசிரியையிடம் 11 பவுன் செயின் அபேஸ்
- பின்னர் தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
- இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன்.
இவரது மனைவி அந்தோணியம்மாள் ( வயது 52).
இவர் தஞ்சையில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் தஞ்சை ஆத்துப்பாலத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பஸ்ஸில் ஏறினார்.
பின்னர் தஞ்சையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.
அப்போது தான் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பலரிடம் விசாரித்து பார்த்தும் நகைகள் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
அப்போதுதான் ஓடும் பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம நபர் நகையை அறுத்துக் கொண்டு திருடி சென்றிருக்கலாம் என சந்தேகப்பட்டார்.
இது குறித்து அவர் தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.