உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் கொரோனா பாதிப்புடன் 17 பேருக்கு சிகிச்சை

Published On 2022-11-14 07:29 GMT   |   Update On 2022-11-14 07:29 GMT
  • நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆக பதிவாகியுள்ளது.
  • இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தினசரி பாதிப்பு ஒற்றை இலக்கில் பதிவாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 3 ஆக பதிவாகி யுள்ளது.

இதனால் மாவட்ட த்தில் இதுவரை கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 604 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால் மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1லட்சத்து 35 ஆயிரத்து 853 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மாவட்டத்தில் 734 பேர் கொரோனா தாக்கம் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் 17 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News