உள்ளூர் செய்திகள்

கடலூரில் 17 வயது பள்ளி மாணவி 8 மாதம் கர்ப்பம்: 16 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு

Published On 2023-05-11 08:50 GMT   |   Update On 2023-05-11 08:50 GMT
  • 17 வயது பள்ளி மாணவி, 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே 16 வயது சிறுவன் குடியிருந்து வந்துள்ளார்
  • சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடலூர்:

கடலூரை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி தற்போது 12-ம் வகுப்பு தேர்வு எழுதி வீட்டில் இருந்து வருகிறார். இவர் வீட்டின் அருகே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 16 வயது சிறுவன் குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது சிறுவன் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவி உடல்நிலை சரியில்லை என உறவினர்களிடம் தெரிவித்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது 8 மாதம் கர்ப்பமாக இருந்து வருவதாக தெரிகிறது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News