உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட‌ புகையிலை பொருட்கள்.

தஞ்சையில் 170 கிலோ புகையிலைபொருட்கள் பறிமுதல்

Published On 2022-11-21 09:41 GMT   |   Update On 2022-11-21 09:41 GMT
  • செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
  • இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சை -திருச்சி சாலையில் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி கொண்டு வந்து கொண்டிருப்பதாக செங்கிப்பட்டி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமோகன் மேற்பார்வையில், செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் ரெத்தினசாமி மற்றும் போலீசார் தஞ்சை -திருச்சி சாலையில் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தினர்.

இந்நிலையில் செங்கிப்பட்டி அருகில் உள்ள முத்தாண்டிப்பட்டி பிரிவு சாலை அருகே கார் ஒன்று நின்று கொண்டிருப்பதை அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து போலீஸாரை பார்த்ததும் காரில் இருந்த இரண்டு பேர் காரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதனையடுத்து காரை போலீஸார் சோதனை மேற்கொண்ட போது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

கார் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 170 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மதிப்பு சுமார் 1,80,000 ருபாய் ஆகும். இது குறித்து செங்கிப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் தப்பி ஓடிய இருவரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News