கோவையில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
- கற்களை எடுத்து சதீஷ்குமார் தலையில் வீசினார்.
- இதுகுறித்து பீளமேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை,
கோவை தொட்டிபாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது33). இவர் தனியார் என்ஜினீயரிங் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் சக ஊழியருக்கும், சதிஷ்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதையடுத்து இங்கு பணிபுரியும் தஞ்சையை சேர்ந்த வினோத்குமார்(19), பிரவின் (18) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சதிஷ்குமாரிடம் எங்களை பற்றி மேலாளரிடம் என்ன கூறினாய்? என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி, அருகில் கிடந்த கற்களை எடுத்து அவரது தலையில் வீசி தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலயே மயங்கி விழுந்தார்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.