பண்ருட்டியில் மாணவர்களுக்கு சப்ளை செய்ய 6 கிலோ கஞ்சா கடத்தல் 2 பேர் கைது.
- பண்ருட்டியில் மாணவர்களுக்கு சப்ளை செய்ய 6 கிலோ கஞ்சா கடத்தல் 2 பேர் கைது.
- அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி போக்கு வரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார்நேற்று பண்ருட்டிசென்னை சாலை கண்டரக் கோட்டை யில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது,அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலம் இருப்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து அவர்களை பண்ருட்டிபோலீஸ் நிலையத்திற்குஅழைத்து வந்து விசாரணைநடத்தினர்கஞ்சா பொட்டல ங்களுடன் சிக்கியவர்களிடம் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார் (பொ) ,சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோ ர்விசாரணைநடத்தினர்விசாரணையில் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியை சேர்ந்த டிரைவர் சதாம் உசேன் (வயது26), அருண்குமார் (24) என்பதும் தெரியவந்தது.
மேலும் சினிமாபட பாணியில் கஞ்சாவை கடத்தி மற்றொரு கஞ்சா கும்பலிடம் ஒப்படைக்க வந்ததுகண்டு பிடிக்க ப்பட்டது .மேலும் பள்ளி, கல் லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யவும் கஞ்சா கடத்தி வந்து உள்ளனர்இதனையடுத்து, 6 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிளை கைப்பற்றி 2பேரை யும்கைதுசெய்தனர். இது தொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.