உள்ளூர் செய்திகள்

கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது

Published On 2022-12-20 10:03 GMT   |   Update On 2022-12-20 10:03 GMT
  • வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
  • கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.

கூடலூர்,

கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கூடலூர் கோத்தர் வயல் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவரை சோதனை செய்தபோது 20 கிராம் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது. இதுதொடர்பாக கூடலூரை சேர்ந்த அரவிந்த் (வயது 25) என்பவரை கைது செய்தனர். இதேபோல் மேல் கூடலூர் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முகேஷ் (18) என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News