உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டு, திருட்டு தனமாக மது விற்ற 2 பேர் கைது
- லாட்டரி சீட்டு விற்ற வெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரை கைது செய்தனர்.
- கள்ளச்சந்தையில் மது விற்ற கிஷோர்குமார் என்பவரிடமிருந்து 38 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவோணம்:
ஒரத்தநாடு பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படுவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா விற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் சக்திவேல் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.
இதேப்போல் கள்ளச்சந்தையில் மது விற்ற ஒரத்தநாடு புதூர் கிராமத்தை சேர்ந்த கிஷோர்குமார் (43) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 38 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.