உள்ளூர் செய்திகள்

கோவையில் தொழிலாளி உள்பட 2 பேர் பலி

Published On 2022-10-05 10:08 GMT   |   Update On 2022-10-05 10:08 GMT
  • கோவை அவினாசி ரோட்டில் பீளமேடு வரதராஜா மில் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
  • அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

கோவை,

தர்மபுரியை சேர்ந்தவர் அவின்குமார் (வயது 26). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் கோவை அவினாசி ரோட்டில் பீளமேடு வரதராஜா மில் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவின்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சுண்டம்பாளைத்தை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 40). சம்பவத்தன்று இவர் தெலுங்குபாளையம் புதூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கருப்புசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Tags:    

Similar News