உள்ளூர் செய்திகள்

வெவ்வேறு விபத்துகளில் முதியவர் உள்பட 2 பேர் சாவு

Published On 2023-05-15 09:19 GMT   |   Update On 2023-05-15 09:19 GMT
  • மினிலாரி ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது.
  • சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சென்னப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் ஏகநாத் (வயது23). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் காரிமங்கலம்-மொரப்பூர் சாலையில் மோட்டூர் அரிசி ஆலை அருகே சென்றார்.

அப்போது அந்த வழியாக மினிலாரி ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஏகநாத் பலத்த காயமடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோன்று காரிமங்கலம் அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பா (வயது75). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் செல்லப்பா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News