உள்ளூர் செய்திகள்

சாந்தகுமார், விஜய்

மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2023-05-25 09:45 GMT   |   Update On 2023-05-25 09:45 GMT
  • அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.
  • கைதான அவர்களை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது48) புளி வியாபாரியான இவர் நேற்று மாலை மாரண்டஅள்ளி முன்சீப் தெருவில் உள்ள நண்பர் நந்தகுமார் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து மாரண்டஅள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வந்தனர்.

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்த போது இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.

விசாரனையில் மாரண்டஅள்ளி அருகே ஏழு குண்டூர் பகுதியை சேர்ந்த சாந்தகுமார் (33) மற்றும் அகரம் பகுதியை சேர்ந்த விஜய் (30) என்பதும் இருவரும் சேர்ந்து திருடியது தெரிய வந்தது.

அவர்கள் இருவரையும் கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைதான அவர்களை பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News