உள்ளூர் செய்திகள் (District)

சாலை விபத்தில் 2 பெண்கள் பலி

Published On 2023-03-31 10:04 GMT   |   Update On 2023-03-31 10:04 GMT
  • எதிர்பாராத விதமாக லாரி மீது வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நசிமா இறந்தார்.
  • டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நித்யா பரிதாபமாக இறந்தார்.

கிருஷ்ணகிரி,

கர்நாடகா மாநிலம், பெங்களுரூ பன்னகட்டா ரோடு பில்லகனல்லி பகுதியை சேர்ந்தவர் நயாஷ்பாஷா (வயது33), இவரது மனைவி நசிமா (27).

இவர்கள் இருவரும் வாகனத்தில் ஒசூர் - கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலையில் சப்படி அருகே சென்று கொண்டிருந்தனர்.

அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி எவ்வித சிக்னல் இல்லாமல் திடீரென சாலையில் நிறுத்தி யுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக லாரி மீது வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நசிமா இறந்தார்.

இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் கன்டெய்னர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதேபோல் ஒசூர் சூசுவாடி பகுதியை சேர்ந்த வர் குமரேசன். இவரது மனைவி நித்யா (35), இவர் ஸ்கூட்டரில் பெங்களுரூ - ஒசூர் சாலையில் தமிழ்நாடு எல்லை அருகே சென்றுகொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த டிப்பர் லாரி ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே நித்யா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சிப்காட் போலீசார் டிப்பர் லாரி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News