செய்திகள் (Tamil News)

வேலூர் அருகே பயிற்சி டி.எஸ்.பி. மீது காரை ஏற்ற முயற்சி - 2 பேர் கைது

Published On 2018-05-14 11:37 GMT   |   Update On 2018-05-14 11:37 GMT
வேலூர் அருகே பயிற்சி டி.எஸ்.பி. மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:

வேலூர் பயிற்சி டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மற்றும் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் இனாயத்பாஷா ஆகிய 2 பேரும் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூர் அடுத்த அருணகிரி பேட்டை கொல்லை மேடு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த கார், பயிற்சி டி.எஸ்.பி. சென்ற பைக் மீது மோதுவது போல் வேகமாக சென்றது.

இதுகுறித்த புகாரின் பேரில் காரை ஓட்டிய அருணகிரிபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 32) மற்றும் அவருடன் வந்த சுமதி (37) என்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News