செய்திகள்
வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் இருந்து கைதி தப்பி ஓட்டம்
வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கைதியை இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தேடி வருகிறார்கள்
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பகுதியில் தனியார் செங்கல்சூளை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தணிக்கலாம் பட்டு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு தொழிலாளி சந்துரு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்து அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி சந்துரு சென்றார். சிறிது நேரத்தில் அவர் போலீஸ் நிலைய காம்பவுண்டு சுவரை ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தப்பி ஓடிய சந்துருவை தேடி வருகிறார்கள்.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பகுதியில் தனியார் செங்கல்சூளை உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள தணிக்கலாம் பட்டு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்த்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் தனியாக இருந்த 7 வயது சிறுமிக்கு தொழிலாளி சந்துரு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதுபற்றி சிறுமியின் பெற்றோர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை கைது செய்து அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறி சந்துரு சென்றார். சிறிது நேரத்தில் அவர் போலீஸ் நிலைய காம்பவுண்டு சுவரை ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதனை கண்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுபற்றி போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் மற்றும் போலீசார் தப்பி ஓடிய சந்துருவை தேடி வருகிறார்கள்.