செய்திகள் (Tamil News)
மேலூரில் 3 குழந்தையுடன் இளம்பெண் மாயம்
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் பெற்றோர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண் 3 குழந்தைகளுடன் மாயம் ஆனார்.
மதுரை:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொங்கம்பட்டியைச் சேர்ந்தவர் காஜாமுகைதீன். இவரது மருமகள் ரேகனா பேகம். இவருக்கு எசாத் (7), இப்பான் (5), ரூபிகா (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று பெற்றோர் வீட்டுக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு செல்வதாக கூறிச் சென்ற ரேகனாபேகம் அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள இளமனூரைச் சேர்ந்த 16 வயதுடைய பெண், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அந்த பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள கொங்கம்பட்டியைச் சேர்ந்தவர் காஜாமுகைதீன். இவரது மருமகள் ரேகனா பேகம். இவருக்கு எசாத் (7), இப்பான் (5), ரூபிகா (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று பெற்றோர் வீட்டுக்கு குழந்தையை அழைத்துக் கொண்டு செல்வதாக கூறிச் சென்ற ரேகனாபேகம் அங்கு செல்லாமல் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை அருகே உள்ள இளமனூரைச் சேர்ந்த 16 வயதுடைய பெண், அதே பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற அந்த பெண் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.