செய்திகள்

மோடி வெளிநாட்டு பிரதமரா? என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது - மு.க. ஸ்டாலின்

Published On 2018-05-27 07:15 GMT   |   Update On 2018-05-27 07:15 GMT
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க. ஸ்டாலின் காவல்துறையை காவிமயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். #sterliteprotest #bansterlite #stalin
மதுரை:

திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவிக்காதது வெட்கக்கேடானது. மோடி வெளிநாட்டு பிரதமரா? என்ற சந்தேகம் எனக்கு வந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று சந்தித்தது கபடநாடகம். காவல்துறையை காவிமயமாக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகுவதே தமிழக மக்களுக்கு பாதுகாப்பு எனவும் அவர் குறிப்பிட்டார். #sterliteprotest #bansterlite #stalin
Tags:    

Similar News