செய்திகள்

துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சரத்குமார் 31-ந் தேதி தூத்துக்குடி செல்கிறார்

Published On 2018-05-29 03:02 GMT   |   Update On 2018-05-29 03:02 GMT
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் 31-ந் தேதி தூத்துக்குடி செல்கிறார்.
சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்று சென்னை திரும்பியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து உடனடியாக சென்னை திரும்ப முடியாத சூழலில், கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கும், படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் வருகின்ற 31-ந் தேதி நேரில் சந்தித்து தனது வருத்தத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News