செய்திகள்

சூலூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2018-05-30 11:10 GMT   |   Update On 2018-05-30 11:10 GMT
சூலூரில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூலூர்:

கோவை சூலூர் ஜீவா நகரை சேர்ந்தவர் அருண்குமார். இவரது மனைவி பிரீத்தி (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் அருண்குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். பிரீத்தி பட்டுப்புடவை மற்றும் கவரிங் நகை வாங்கி விற்பனை செய்து வருகிறார்.

பள்ளி விடுமுறையையொட்டி ராஜபாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு மகன்களை அனுப்பி வைத்தார். பள்ளி திறக்க உள்ள நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் சென்றார்.

நேற்று காலை அக்கம் பக்கத்தினர் பிரீத்தியின் வீட்டை பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து செல்போன் மூலம் பிரீத்திக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனே கோவை விரைந்து வந்தார்.

வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவை உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் மகன்கள் வாங்கிய 3 தங்கப்பதக்கம், விலை உயர்ந்த செல்போன், ரூ.1 லட்சம் மதிப்புள்ள பட்டுப்புடவை, ரூ.20 ஆயிரம் உண்டியல் பணம் கொள்ளை போயிருந்தது. இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News