செய்திகள் (Tamil News)

பாவூர்சத்திரத்தில் பைக் விபத்தில் 3 பேர் காயம்

Published On 2018-05-30 12:06 GMT   |   Update On 2018-05-30 12:06 GMT
பாவூர்சத்திரத்தில் பைக்குகள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 35). இவரும் கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்த சுடலைமணி (50) என்பவரும் நேற்று மாலை தென்காசி சென்று விட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். பைக் பாவூர்சத்திரம் பள்ளி அருகில் வந்த போது இவர்களது பைக் முன்னால் சென்ற பாவூர்சத்திரம் வடக்கு தெருவை சேர்ந்த திராவிடமணி (36) என்பவர் பைக் மீது மோதியதாம்.

இதில் சிவகுமார், சுடலைமணி ஆகியோருக்கு பலத்த காயமும், திராவிடமணிக்கு லேசான காயமும் ஏற்பட்டது. 3 பேரும் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News