செய்திகள்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தங்கப்பா மரணம்

Published On 2018-05-31 09:07 GMT   |   Update On 2018-05-31 09:07 GMT
இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் லெனின் தங்கப்பா புதுச்சேரியில் இன்று காலமானார். #MLThangappa #SahityaAcademyAward
புதுச்சேரி:

புதுச்சேரி மாவட்டம் அவ்வை நகரில் வசித்து வருபவர் தமிழ் எழுத்தாளர் லெனின் தங்கப்பா (84). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் குறும்பலாபேரி. இவர் தாகூர் கலைக்கல்லூரி மற்றும் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி ஆகியவற்றில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

இவர் 50-க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை எழுதியுள்ளார். மேலும், பாரதியார், அரவிந்தர் மற்றும் பாரதிதாசன் ஆகியோரின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இவர் எழுதிய, சோளக்கொல்லை பொம்மை என்ற நூலுக்கு 2010-ம் ஆண்டுக்கான குழந்தை இலக்கிய பிரிவில் சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. #MLThangappa #SahityaAcademyAward
Tags:    

Similar News