செய்திகள் (Tamil News)
குடும்ப தகராறில் மனைவியை குத்தி கொன்ற என்ஜினீயர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
குடும்ப தகராறில் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு கணவன் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர்:
பட்டாபிராம் சார்லஸ் நகர் அவ்வையார் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன் (26). இவரது மனைவி மதுமிதா(23).
என்ஜினீயர்களான இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர்.
இவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு பட்டாபிராமில் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது மதுமிதா ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். அவரது உடலில் பல பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது.
அவர் அருகே வெங்கடேசன் கழுத்தை அறுத்தபடி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெங்கடேசனை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப தகராறில் வெங்கடேசன், மதுமிதாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்று உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.
இக்கொலை சம்பவத்தால் பட்டாபிராம் பகுதியில் பரபரப்பு நிலவியது.#tamilnews
பட்டாபிராம் சார்லஸ் நகர் அவ்வையார் தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன் (26). இவரது மனைவி மதுமிதா(23).
என்ஜினீயர்களான இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினர்.
இவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு பட்டாபிராமில் தனி குடித்தனம் நடத்தி வந்தனர்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன் வீட்டில் இருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த போது மதுமிதா ரத்த வெள்ளத்தில் கீழே கிடந்தார். அவரது உடலில் பல பகுதிகளில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது.
அவர் அருகே வெங்கடேசன் கழுத்தை அறுத்தபடி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீஸ் மற்றும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இருவரையும் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு மதுமிதாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வெங்கடேசனை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குடும்ப தகராறில் வெங்கடேசன், மதுமிதாவை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்று உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருவருக்கும் இடையே எந்த பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது என்று போலீசார் விசாரிக்கிறார்கள்.
இக்கொலை சம்பவத்தால் பட்டாபிராம் பகுதியில் பரபரப்பு நிலவியது.#tamilnews