செய்திகள்

பொன்னேரி-சோழவரம் பகுதியில் விதிமீறி வாகனம் ஓட்டிய 330 பேர் மீது வழக்கு

Published On 2018-06-04 08:04 GMT   |   Update On 2018-06-04 08:04 GMT
பொன்னேரி-சோழவரம் பகுதியில் விதிகளை மீறி வாகனம் ஓட்டிய மொத்தம் 330 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பொன்னேரி:

பொன்னேரி உட்கோட்ட போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம், பொன்னேரி, காட்டூர், திருப்பாலைவனம், மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிகவேகமாக வாகனம் ஓட்டி வந்தது, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், லைசென்ஸ், ஹெல் மேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் என விதிமுறை மீறிய மொத்தம் 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களி டம் இருந்து ரூ. 33 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News