செய்திகள் (Tamil News)

டி.கல்லுப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

Published On 2018-06-09 09:24 GMT   |   Update On 2018-06-09 09:24 GMT
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சின்னபூலாம் பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 56). குன்னத்தூர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வேலையை முடித்து வீட்டிற்கு புறப்பட்டார். பஸ் நிறுத்தம் நோக்கிச் சென்றபோது அந்த வழியே வந்த மறவன்குளம் செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மோதியது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பாண்டி பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை செல்லப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.

அவரது மகள் ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Tags:    

Similar News