செய்திகள்

எழுத்தாளர் சவுந்திரபாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்

Published On 2018-06-11 02:13 GMT   |   Update On 2018-06-11 02:16 GMT
மகனை கொலை செய்ததாக கைதாகி சிறையில் இருந்த எழுத்தாளர் சவுபா(எ) சவுந்திரபாண்டியன் உடல் நலக்குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் காலமானார். #WriterSoundarapandian
மதுரை:

மதுரை டோக்நகரைச் சேர்ந்தவர் எழுத்தாளர் சௌந்தரபாண்டியன் என்ற சவுபா(55). இவர், கடந்த மே மாதம் தனது மகன் விபினை (27) கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், சிறையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சவுந்திரபாண்டியன், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். #WriterSoundarapandian
Tags:    

Similar News