செய்திகள்

விளாத்திகுளம் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

Published On 2018-06-24 16:20 GMT   |   Update On 2018-06-24 16:20 GMT
விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம்:

விளாத்திகுளம் தாசில்தார் லெனின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டில்பட்டி கிராமம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், உரிய ஆவணங்கள் இல்லாததும், திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

Tags:    

Similar News