செய்திகள்
திருநங்கையை காதலித்து திருமணம் செய்த வாலிபர்
குடியாத்தம் அருகே லாரி டிரைவர் திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்க்கு பின் வீட்டுக்கு அழைத்து செல்லாததால் திருநங்கை போலீசில் புகார் அளித்துள்ளார்.
குடியாத்தம்:
குடியாத்தம் மொர்சபல்லி கிராமத்தை சேர்ந்த ஒரு திருநங்கைக்கும், மவுசன்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நெருக்கம் இருக்கமானதால் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர்.
கடந்த ஜனவரி 15ம் தேதி திருநங்கையான தனது காதலியை லாரி டிரைவர் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், தனது வீட்டுக்கு திருநங்கையை அழைத்துச் செல்லாமல் தனி குடித்தனம் வைத்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு தான், இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என திருநங்கை முடிவு செய்திருந்தார். ஆனால் திருநங்கை ஆசை நிராசையானது. திடீரென திருநங்கையை விட்டு லாரி டிரைவர் ஒரே அடியாக விலகிவிட்டார்.
இந்த நிலையில் மனம் நொந்துபோன திருநங்கை, கணவன் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றார். எனக்கும் மனம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே நான் திருநங்கை என தெரியும். திருமணம் செய்த பிறகு என்னை வெறுப்பது எந்த விதத்தில் நியாயம் என்றார்.
பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிய காதல் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருநங்கையை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் திரும்ப வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட திருநங்கை, தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், நானும் காதல் கணவனும் உண்மையாக காதலித்தோம்.
திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினரின் பேச்சை கேட்டுக் கொண்டு காதலை தூக்கி எறிந்துவிட்டார்.மீண்டும் என் காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள். அவருடன் இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார். வித்தியாசமான வழக்கு என்பதால் குழம்பி நிற்கின்றனர். #tamilnews
குடியாத்தம் மொர்சபல்லி கிராமத்தை சேர்ந்த ஒரு திருநங்கைக்கும், மவுசன்பேட்டையை சேர்ந்த லாரி டிரைவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நெருக்கம் இருக்கமானதால் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தனர்.
கடந்த ஜனவரி 15ம் தேதி திருநங்கையான தனது காதலியை லாரி டிரைவர் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், தனது வீட்டுக்கு திருநங்கையை அழைத்துச் செல்லாமல் தனி குடித்தனம் வைத்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற பிறகு தான், இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என திருநங்கை முடிவு செய்திருந்தார். ஆனால் திருநங்கை ஆசை நிராசையானது. திடீரென திருநங்கையை விட்டு லாரி டிரைவர் ஒரே அடியாக விலகிவிட்டார்.
இந்த நிலையில் மனம் நொந்துபோன திருநங்கை, கணவன் வீட்டிற்கு நியாயம் கேட்க சென்றார். எனக்கும் மனம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே நான் திருநங்கை என தெரியும். திருமணம் செய்த பிறகு என்னை வெறுப்பது எந்த விதத்தில் நியாயம் என்றார்.
பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிய காதல் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் திருநங்கையை அடித்து விரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் திரும்ப வந்தால் கொன்று விடுவோம் என மிரட்டினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட திருநங்கை, தனது கணவருடன் சேர்த்து வைக்குமாறு குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், நானும் காதல் கணவனும் உண்மையாக காதலித்தோம்.
திருமணத்திற்கு பிறகு குடும்பத்தினரின் பேச்சை கேட்டுக் கொண்டு காதலை தூக்கி எறிந்துவிட்டார்.மீண்டும் என் காதல் கணவருடன் சேர்த்து வையுங்கள். அவருடன் இல்லற வாழ்க்கையை தொடங்க வேண்டும் என கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார். வித்தியாசமான வழக்கு என்பதால் குழம்பி நிற்கின்றனர். #tamilnews