செய்திகள்

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் மின் இணைப்பு அறையில் திடீர் தீ விபத்து

Published On 2018-07-11 11:38 GMT   |   Update On 2018-07-11 11:38 GMT
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின் இணைப்பு அறையில் திடீரென்று தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் மின் இணைப்பு அறையில் திடீரென்று தீப்பிடித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் அங்கு வந்து உடனடியாக தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக மருத்துவமனையில் மின்வெட்டு ஏற்பட்டு இருந்தது.  தீ விபத்து காரணமாக மருத்துவமணையில் பரபரப்பு நிலவியது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் மருத்துவமனையில் தீ அனைத்து மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்து உயர் மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
Tags:    

Similar News